Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தலைமுறைகள் தெரிந்துகொள்ள சிலை கிராமம்

Go down

தலைமுறைகள் தெரிந்துகொள்ள சிலை கிராமம் Empty தலைமுறைகள் தெரிந்துகொள்ள சிலை கிராமம்

Post by oviya Mon Jul 27, 2015 3:21 pm

கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னார் காந்தியடிகள். நமது அரசாங்கமும் கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என்ற திட்டம் அறிவித்திருக்கிறது.

கிராமங்களை பாதுகாப்பது என்பதையே சிலர், கிராமங்களுக்கு தேவையான நவீனமயமான நகர வசதிகளை செய்துகொடுத்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் அருகில் கனேரி என்னும் இடத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான சித்தகிரி மடத்தை சேர்ந்தவர்களால் 2007 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ’சித்தகிரி கிராம ஜீவன்’ என்னும் அருங்காட்சியகம்.

வழக்கமான அருங்காட்சியகங்கள் போல அல்லாமல், பழமையான வீடுகளையும், விழி கொள்ளா எழில் ததும்பும் வயல்வெளிகளையும் கொண்ட ஒரு கிராமத்தையே அருங்காட்சியப் படுத்தியுள்ளனர்.
ஒரு நிஜமான கிராமமே பின்புலமாகவும் அங்கு வாழும் மனிதர்களுக்கு பதிலாக சிலைகளும் உள்ளன. இந்த சிலைகள் மெல்லிய துணிகள், பாறை கற்கள், சிமென்ட், பெயின்ட் ஆகியவற்றை பயன்படுத்தி பல விதங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாடுகளை பூட்டி ஏர் உழுதல், விவசாய வேலைகள் பல செய்தல், கல் உடைத்தல், பால் கறத்தல், மீன் பிடித்தல், தறி நெய்தல், சவரம் செய்தல், மாடுகளுக்கு லாடம் அடித்தல் என சகலமான கிராமிய வேலைகளும் வீடுகளை ஒட்டியே செய்துகொண்டிருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருப்பது, கிராமத்தின் உயிரோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

கைவண்ண செய்நேர்த்தி பிரமிப்பாகவும் அந்த கிராமிய சூழல் ஆழ்மனதை வருடுவதாகவும் உள்ளது. இந்திய கிராமங்களின் பழங்கால பழக்க வழக்கம், கூட்டு குடும்ப முறை, கலை பண்பாடு, மரியாதை, நாகரிகத்தை விவரிப்பதாகவும் அப்படிப்பட்ட இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்துவதாகவும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆன்மீக வழிபாடுகளையும், சிவ நெறிகளையும் விளக்கும் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு கிராமத்துக்கு தேவையான அளவுக்கேற்ப 3000 சிலைகள் உள்ளன.

இரண்டரை கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பீட்டில் திறமையான கலை வல்லுனர்களை கொண்டு குரு ஆத்ரிஷ்ய கட்ஷிட் தேஷ்வர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் வரும் சந்ததிகளுக்கு கிராமங்களை பற்றி அறிந்துகொள்ள வழிசெய்யலாம்.

ஆனால், நம் சந்ததிகள் அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் வாழ ஆசைப்பட்டால் என்ன செய்வது. காரணம் எப்படிபட்ட புதுமை விரும்பிகளையும் இயற்கையான கிராமத்தை பார்த்தால், கொஞ்ச காலமாவது அங்கு வாழ ஆசைப்பட தூண்டுவதுதான் ஒரு கிராமத்தின் ஜீவன்.

அதனால், கிராமத்தை அருங்காட்சியகமாக மட்டுமே வைத்திராமல் அங்கங்கு நிஜமாக இருக்கவும் வழிசெய்வோம்.

நகரம் நம் தேவைகளை பூர்த்திசெய்கிறது. கிராமம் நம் தேவைகளையே குறைத்துவிடுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum