Top posting users this month
No user |
மக்களை ஏமாற்றும் வேலைகளில் முஸ்லிம் காங்கிரஸ்!
Page 1 of 1
மக்களை ஏமாற்றும் வேலைகளில் முஸ்லிம் காங்கிரஸ்!
எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குவேட்டையாடும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. .
அம்பாறை மாவட்டத்தைப்பொறுத்தவரை இம்முறை முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து பல்முனைப் போட்டி நிலவுகின்றது.
கடந்த காலங்களில் சோம்பேறித்தன அரசியலை முன்னெடுத்த இக்கட்சியின் ஒருசிலர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமை போன்ற விடயங்கள் அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன.
தவிரவும் மூவின மக்களும் செறிவாக வாழும் அம்பாறையில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
குறைந்த பட்சமாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனையில் தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்ததைத் தவிர முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் எதனையும் சாதிக்கவில்லை.
இதன் காரணமாக முன்னைய காலங்களில் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் வாக்குகளில் கணிசமான வாக்குவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை ஈடுகட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தற்போது பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வாரத்தில் அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூலம் சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை அமைத்துத் தரப்படும் என்று வாக்குறுதியளிக்க வைக்கவும் முஸ்லிம் காங்கிரஸின்' அரசியல்வாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன் மூலம் அப்பகுதி மக்களின் வாக்குகளை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைப்பொறுத்தவரை இம்முறை முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து பல்முனைப் போட்டி நிலவுகின்றது.
கடந்த காலங்களில் சோம்பேறித்தன அரசியலை முன்னெடுத்த இக்கட்சியின் ஒருசிலர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமை போன்ற விடயங்கள் அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன.
தவிரவும் மூவின மக்களும் செறிவாக வாழும் அம்பாறையில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
குறைந்த பட்சமாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனையில் தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்ததைத் தவிர முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் எதனையும் சாதிக்கவில்லை.
இதன் காரணமாக முன்னைய காலங்களில் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் வாக்குகளில் கணிசமான வாக்குவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை ஈடுகட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தற்போது பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வாரத்தில் அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூலம் சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபை அமைத்துத் தரப்படும் என்று வாக்குறுதியளிக்க வைக்கவும் முஸ்லிம் காங்கிரஸின்' அரசியல்வாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன் மூலம் அப்பகுதி மக்களின் வாக்குகளை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum