Top posting users this month
No user |
பூங்காவில் நடைப்பயிற்சி சென்றவரை செருப்பால் அடித்த பெண் பொலிஸ்: பரவும் வாட்ஸ் அப் வீடியோ
Page 1 of 1
பூங்காவில் நடைப்பயிற்சி சென்றவரை செருப்பால் அடித்த பெண் பொலிஸ்: பரவும் வாட்ஸ் அப் வீடியோ
சென்னையில் பூங்கா ஒன்றில் பெண் தலைமை காவலர் ஒருவர், தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக கூறி நபர் ஒருவரை செருப்பால் அடிக்கும் காட்சி வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ளது.
சென்னை காவல் துறையில் பயிற்சி பிரிவில் தலைமை காவலராக இருக்கும் கோமதி, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் மகனுடன் கோமதி வசித்து வருகிறார்.
இவர் வசிக்கும் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு அருகே பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கான பூங்கா உள்ளது.
இங்கு, நடைபயிற்சிக்கு வரும் நபர் ஒருவர், காவலர் கோமதியின் மகனுடன் பழக்கமாகி உள்ளார்.
பழக்கமான நபர், கோமதி பற்றி தவறாக மற்றவர்களுடன் பேசி வருவதாக கோமதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி ஏற்கனவே ஓட்டேரி காவல் நிலையத்தில் கோமதி புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி விசாரித்த இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அந்த நபரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென பூங்காவுக்கு சென்ற கோமதி, அங்கு, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சம்பந்தப்பட்ட நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் செருப்பால் அடித்துள்ளார்.
அதை சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டனர்.
கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தலைமையிட கூடுதல் ஆணையர் இதுபற்றி கோமதியிடம் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், அவரை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை காவல் துறையில் பயிற்சி பிரிவில் தலைமை காவலராக இருக்கும் கோமதி, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் மகனுடன் கோமதி வசித்து வருகிறார்.
இவர் வசிக்கும் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு அருகே பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கான பூங்கா உள்ளது.
இங்கு, நடைபயிற்சிக்கு வரும் நபர் ஒருவர், காவலர் கோமதியின் மகனுடன் பழக்கமாகி உள்ளார்.
பழக்கமான நபர், கோமதி பற்றி தவறாக மற்றவர்களுடன் பேசி வருவதாக கோமதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி ஏற்கனவே ஓட்டேரி காவல் நிலையத்தில் கோமதி புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி விசாரித்த இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அந்த நபரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென பூங்காவுக்கு சென்ற கோமதி, அங்கு, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சம்பந்தப்பட்ட நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் செருப்பால் அடித்துள்ளார்.
அதை சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டனர்.
கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தலைமையிட கூடுதல் ஆணையர் இதுபற்றி கோமதியிடம் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், அவரை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum