Top posting users this month
No user |
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம்
Page 1 of 1
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம்
கதிர்காம முருகன் ஆலய உற்சவ தினத்தினை முன்னிட்டு கால்நடையாக பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தினை சேர்ந்த திருமதி.மேகவல்லி ரவிச்சந்திரன் வயது (43) என்ற குடும்ப நல உத்தியோகஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இவர் புதன்கிழமை காலை பிரதேசத்திலுள்ள கதிர்காம யாத்திரிகர் குழுவினருடன் பேருந்து ஒன்றில் யாத்திரை மேற்கொண்டதாகவும், பின்னர் உகந்மை முருகன் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை தரித்து நின்று மறுநாள் காலை வியாழக்கிழமை காட்டுவழியாக யாத்திரை குழுவினருடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது பெருவெட்டை எனும் இடத்தில் உடலில் சோர்வு ஏற்பட்டதiனை தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரின் உதவியுடன் பாணமவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்போது சடலம் பாணம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது கதிர்காம உற்சவ விழா இடம்பெறுவதினால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் யாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தினை சேர்ந்த திருமதி.மேகவல்லி ரவிச்சந்திரன் வயது (43) என்ற குடும்ப நல உத்தியோகஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இவர் புதன்கிழமை காலை பிரதேசத்திலுள்ள கதிர்காம யாத்திரிகர் குழுவினருடன் பேருந்து ஒன்றில் யாத்திரை மேற்கொண்டதாகவும், பின்னர் உகந்மை முருகன் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை தரித்து நின்று மறுநாள் காலை வியாழக்கிழமை காட்டுவழியாக யாத்திரை குழுவினருடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது பெருவெட்டை எனும் இடத்தில் உடலில் சோர்வு ஏற்பட்டதiனை தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரின் உதவியுடன் பாணமவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்போது சடலம் பாணம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது கதிர்காம உற்சவ விழா இடம்பெறுவதினால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் யாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum