Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்ய தயார்: பிரதமர்

Go down

மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்ய தயார்: பிரதமர் Empty மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்ய தயார்: பிரதமர்

Post by oviya Tue Jul 07, 2015 2:31 pm

இலங்கை மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குறித்த முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை ரத்துச் செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறி பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்களின் பணத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியாவிட்டால், இந்த இடத்தில் இருக்கக் கூடாது. அதன் காரணமாக மத்திய வங்கியின் முறி பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் மூலம் செல்வந்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் உள்ள மக்களின் பணம் பாதுகாக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் திருடர்களுக்காக பேசுவது ஆச்சரியமான விடயமல்ல.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் முறி பத்திர கொடுக்கல் வாங்கலில் தவறு நடந்துள்ளது என கூறியிருந்தால், அதனை இரத்துச் செய்ய தயார்.

அத்துடன் இந்த மத்திய வங்கியின் முறி பத்திர தொடர்பான விவகாரம் குறித்து புதிய நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum