Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் அடை
Page 1 of 1
புடலங்காய் அடை
புழுங்கலரிசி - ஒரு ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
கொள்ளு - 2 மேசைக்கரண்டி
பிஞ்சு புடலங்காய் - கால் பாகம் + விதை மற்றும் சதைப்பகுதி
புதினா - 10 இலைகள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6
எண்ணெய் - தேவையான அளவு
புழுங்கலரிசி முதல் கொள்ளு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சின்ன ரவை பதத்திற்கு அரைக்கவும். கடைசியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். (மாவு தயிர் பதத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது).
சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தாப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். (அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்).
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
மொறுமொறுப்பான புடலங்காய் அடை தயார். தேங்காய் சட்னி, அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் தான் சுவை நன்றாக இருக்கும்.
பச்சரிசி - அரை ஆழாக்கு
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
கொள்ளு - 2 மேசைக்கரண்டி
பிஞ்சு புடலங்காய் - கால் பாகம் + விதை மற்றும் சதைப்பகுதி
புதினா - 10 இலைகள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6
எண்ணெய் - தேவையான அளவு
புழுங்கலரிசி முதல் கொள்ளு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சின்ன ரவை பதத்திற்கு அரைக்கவும். கடைசியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். (மாவு தயிர் பதத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது).
சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தாப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். (அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்).
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
மொறுமொறுப்பான புடலங்காய் அடை தயார். தேங்காய் சட்னி, அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் தான் சுவை நன்றாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum