Top posting users this month
No user |
இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள்- கிழக்கு முதல்வருக்கிடையில் சந்திப்பு
Page 1 of 1
இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள்- கிழக்கு முதல்வருக்கிடையில் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 32 தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் உள்ளிட்ட கிழக்கு மாகாண உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது இன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் விஷேடமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா, சவூதி அரேபியா, ஓமான், குவைத்,பஹ்ரைன், உட்பட 30க்கு மேற்பட்ட நாடுகளின் இலங்கைத் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மீள் குடியேற்றம்,கைத்தொழில், விவசாயம், கல்வி, மீன்பிடி, உல்லாசப்பிரயாணத்துறை, வீதி அபிவிருத்தி மற்றும் முதலீடுகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விரிவாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்ட தூதுவர்களும்,உயர்ஸ்த்தானியர்களும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளினூடாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வேலைவாய்ப்புக்கும், மற்றும் இதர தொழிநுட்ப அபிவிருத்திக்கும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் மற்றும் சுபீட்சத்துக்காகவும் அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர், உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பானது இன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் விஷேடமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா, சவூதி அரேபியா, ஓமான், குவைத்,பஹ்ரைன், உட்பட 30க்கு மேற்பட்ட நாடுகளின் இலங்கைத் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மீள் குடியேற்றம்,கைத்தொழில், விவசாயம், கல்வி, மீன்பிடி, உல்லாசப்பிரயாணத்துறை, வீதி அபிவிருத்தி மற்றும் முதலீடுகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விரிவாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்ட தூதுவர்களும்,உயர்ஸ்த்தானியர்களும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளினூடாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வேலைவாய்ப்புக்கும், மற்றும் இதர தொழிநுட்ப அபிவிருத்திக்கும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் மற்றும் சுபீட்சத்துக்காகவும் அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர், உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum