Top posting users this month
No user |
கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய நிலையிலா ஜெயலலிதா உள்ளார்?
Page 1 of 1
கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய நிலையிலா ஜெயலலிதா உள்ளார்?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.
நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெண் வாக்காளர்கள் 74.8 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 74 சதவீதமும் வாக்களித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் கும்பல் கும்பலாக வந்து கள்ள ஓட்டு போடுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.மகேந்திரன், 147வது சாவடியில் 200 பேர் வாக்களித்த நிலையில் ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ள ஓட்டு பதிவாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
பக்கத்து தொகுதிகளில் உள்ள அதிமுகவினர் 50, 60 பேராக வந்து ஓட்டு போடுகின்றனர். தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களை துணை ராணுவத்தை கொண்டு விரட்ட வேண்டும். கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற வேண்டிய நிலையிலா உள்ளார் ஜெயலலிதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிராபிக் ராமசாமி
நான் 15 வாக்குச்சாவடிகளை பார்த்தேன். 174, 175, 176, 177, 178 ஆகிய வாக்குச்சாவடியின் உள்ளுக்குள் காவல்துறையே கிடையாது.
துணை ராணுவம், பொலிசார் ரோட்டில் நின்றுள்ளனர். வாக்குச்சாவடியில் ஊழியர்கள் பயப்படுகின்றனர். கும்பல் கும்பலாக ஆளும் கட்சியினர் உள்ளே செல்கின்றனர்.
என் கார் உள்ளே போகும்போது இன்ஸ்பெக்டர் தடுக்கிறார். ஆனால் ஆளும் கட்சியினர் கும்பல் கும்பலாக உள்ளே செல்கின்றனர்.
இந்த தேர்தல் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெண் வாக்காளர்கள் 74.8 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 74 சதவீதமும் வாக்களித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் கும்பல் கும்பலாக வந்து கள்ள ஓட்டு போடுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.மகேந்திரன், 147வது சாவடியில் 200 பேர் வாக்களித்த நிலையில் ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ள ஓட்டு பதிவாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
பக்கத்து தொகுதிகளில் உள்ள அதிமுகவினர் 50, 60 பேராக வந்து ஓட்டு போடுகின்றனர். தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களை துணை ராணுவத்தை கொண்டு விரட்ட வேண்டும். கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற வேண்டிய நிலையிலா உள்ளார் ஜெயலலிதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிராபிக் ராமசாமி
நான் 15 வாக்குச்சாவடிகளை பார்த்தேன். 174, 175, 176, 177, 178 ஆகிய வாக்குச்சாவடியின் உள்ளுக்குள் காவல்துறையே கிடையாது.
துணை ராணுவம், பொலிசார் ரோட்டில் நின்றுள்ளனர். வாக்குச்சாவடியில் ஊழியர்கள் பயப்படுகின்றனர். கும்பல் கும்பலாக ஆளும் கட்சியினர் உள்ளே செல்கின்றனர்.
என் கார் உள்ளே போகும்போது இன்ஸ்பெக்டர் தடுக்கிறார். ஆனால் ஆளும் கட்சியினர் கும்பல் கும்பலாக உள்ளே செல்கின்றனர்.
இந்த தேர்தல் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum