Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்

Go down

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம் Empty மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்

Post by oviya Sat Jun 27, 2015 3:31 pm

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக் கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த கைதி சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடைப்பட்ட வேளையில் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விதானலாகே டொம் ஒஸின் (வயது 35) என்ற சிறைக் கைதியே தப்பி ஓடியுள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு 12 ஆம் மாதத்திலிருந்து தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

மீரிகம, ஹோமாகம, கல்கிஸ்ஸ மற்றும் ஹொரண ஆகிய நீதிமன்றங்களில் இவருக்கெதிராக தொடரப்பட்ட 56 வழக்குகளில் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்தனால் 46 வருடங்களும் ஒரு மாதமும் சிறைத் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தனது 25 வயதில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவருக்கு தற்போது 35 வயதாகிறது.

சிறைச்சாலையில் இருக்கும் போதும் இவர் மூன்று தொலைபேசி இலக்கங்களைப் பாவித்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டைப் பகுதிகளிலுள்ளவர்களை தொலைபேசி வாயிலாக மிரட்டி 1 கோடி 30 இலட்ச ரூபாய் கப்பமாகப் பெற்றுள்ளார் என்ற விவரத்தையும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறித்த சிறைக் கைதியின் கண்காணிப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த துஷாந்தன் என்ற சிறைக்காவலர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, கைது செய்யபட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறைக் கைதியின் தடுப்பு அறைக்கு மூன்று பூட்டுக்கள் உண்டு. எனினும் சம்பவம் இடம்பெற்ற தினம் அந்த தடுப்பு அறையின் முதலாவது பூட்டு பூட்டப்பட்டிருக்கவில்லை என்று விசாரணையில் இருந்து தெரியவந்திருக்கின்றது.

இக்கைதி தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum