Top posting users this month
No user |
மணப்பெண்ணுக்கு 'காஸ்ட்லி' புடவை: கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
Page 1 of 1
மணப்பெண்ணுக்கு 'காஸ்ட்லி' புடவை: கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
திண்டிவனம் அருகே மணப்பெண்ணுக்கு அதிக விலையில் புடவை எடுத்துக் கொடுத்ததால், மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ஜெயபாரதிக்கும், திண்டிவனத்தை அடுத்த இறையானூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி மணப்பெண்ணிற்கு கல்யாணப் புடவை எடுப்பதற்காக ஜெயபாரதியின் தாய் மீரா மற்றும் உறவினர்கள் ஜவுளி கடைக்கு சென்றனர்.
அங்கு பெண்ணுக்கு கல்யாணப் பட்டுசேலை, மாப்பிள்ளைக்கு வேட்டி சட்டை மற்றும் உறவினர்களுக்கு ஜவுளியும் எடுத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய தாய் மீராவிடம் மணப்பெண்ணின் கல்யாணப் பட்டுச்சேலையின் விலை குறித்து ஜெயபாரதி விசாரித்துள்ளார்.
விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயபாரதி, ஏன் இவ்வளவு அதிக விலையில் புடவை எடுத்தீர்கள் என கேட்டு தாயாருடன் சண்டை போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
கோபம் குறைந்ததும் ஜெயபாரதி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருவீட்டாரும் கல்யாண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், ஜெயபாரதி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் ஜெயபாரதியை தேடி வந்தனர்.
ஆனால், எங்கு தேடியும் ஜெயபாரதி கிடைக்கவில்லை. இதனால் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
வழக்குபதிவு செய்த பொலிசார், மாயமான ஜெயபாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து இன்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ஜெயபாரதிக்கும், திண்டிவனத்தை அடுத்த இறையானூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி மணப்பெண்ணிற்கு கல்யாணப் புடவை எடுப்பதற்காக ஜெயபாரதியின் தாய் மீரா மற்றும் உறவினர்கள் ஜவுளி கடைக்கு சென்றனர்.
அங்கு பெண்ணுக்கு கல்யாணப் பட்டுசேலை, மாப்பிள்ளைக்கு வேட்டி சட்டை மற்றும் உறவினர்களுக்கு ஜவுளியும் எடுத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய தாய் மீராவிடம் மணப்பெண்ணின் கல்யாணப் பட்டுச்சேலையின் விலை குறித்து ஜெயபாரதி விசாரித்துள்ளார்.
விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயபாரதி, ஏன் இவ்வளவு அதிக விலையில் புடவை எடுத்தீர்கள் என கேட்டு தாயாருடன் சண்டை போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
கோபம் குறைந்ததும் ஜெயபாரதி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருவீட்டாரும் கல்யாண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், ஜெயபாரதி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் ஜெயபாரதியை தேடி வந்தனர்.
ஆனால், எங்கு தேடியும் ஜெயபாரதி கிடைக்கவில்லை. இதனால் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
வழக்குபதிவு செய்த பொலிசார், மாயமான ஜெயபாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து இன்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum