Top posting users this month
No user |
தேர்தலில் போட்டியிடும் பேய்களில் சிறந்த பேய்களுக்கு வாக்களியுங்கள்!
Page 1 of 1
தேர்தலில் போட்டியிடும் பேய்களில் சிறந்த பேய்களுக்கு வாக்களியுங்கள்!
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் களமிறக்க கூடும். அந்தப் பேய்களில் சிறந்த பேய்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப்பொருள், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்கக் கூடாது. இதனை நான் கட்சித்தலைவர்களிடமும் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் தமது கையில் உள்ள வாக்கினை அளிப்பதற்கு முன்னர் யாருக்கு? எதற்கு? அளிக்கிறோம் என்பதனை சிந்திக்க வேண்டும்.
சிலவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் இறக்கக் கூடும் என்றும் அதில் சிறந்த பேய் தெரிவில் சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும், தேர்தலுக்கு பணம் கிடைப்பது, செலவு செய்வது போன்றவை வெளிப்படுத்தப்பட வேண்டும், வங்கிக் கணக்கு சோதனை செய்யும் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப்பொருள், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்கக் கூடாது. இதனை நான் கட்சித்தலைவர்களிடமும் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் தமது கையில் உள்ள வாக்கினை அளிப்பதற்கு முன்னர் யாருக்கு? எதற்கு? அளிக்கிறோம் என்பதனை சிந்திக்க வேண்டும்.
சிலவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் இறக்கக் கூடும் என்றும் அதில் சிறந்த பேய் தெரிவில் சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும், தேர்தலுக்கு பணம் கிடைப்பது, செலவு செய்வது போன்றவை வெளிப்படுத்தப்பட வேண்டும், வங்கிக் கணக்கு சோதனை செய்யும் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum