Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது: தலைமறைவான பெற்றோர்

Go down

காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது: தலைமறைவான பெற்றோர் Empty காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது: தலைமறைவான பெற்றோர்

Post by oviya Tue Jun 23, 2015 3:18 pm

காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞரை கைது செய்த பொலிசார் அவனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் அருகே ராஜ்பகதூர் (25), என்ற வாலிபர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இருவரும் நட்பாக பழக தொடங்கியதை அடுத்து, அடிக்கடி சந்தித்துக் கொள்வது, தொலை பேசியில் பேசுவது ஜோடியாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது என முன்னேறியுள்ளனர்.

ஆனால் ராஜ்பகதூரின் உண்மை குணம் தெரிந்ததால் அவரிடமிருந்து அந்த பெண் விலக ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையே அவர்களின் பழக்கம் தேவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் உடனடியாக தேவிக்கு உறவு வட்டாரத்தில் மாப்பிள்ளை பேசி முடித்துவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்பகதூர் தேவியின் வீட்டுக்குச் சென்று நானும் உங்கள் பெண்ணும் நெருக்கமாக பழகியிருக்கிறோம். எனவே உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

பின்னர் ராஜ்பகதூரின் பெற்றோரை அழைத்து பேசிய தேவியின் பெற்றோர், எங்கள் பெண், உங்கள் பையனை விரும்பவில்லை.

அவள் விருப்பப்படிதான் வேறு இடத்தில் எங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராஜ்பகதூர் அந்த பெண்ணிடம், நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் எல்லா புகைப்படங்களையும் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன்.

உன் பெற்றோரிடம் இதுபற்றி கூறினால் அவர்களது உயிருக்கும் ஆபத்துதான் என்று மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் தேவியின் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால், மயிலாடுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தேவி முறையிட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் உடனடியாக வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டதால், ராஜ்பகதூர், அவரது தந்தை ராஜாராமன், தாய் கவுசல்யா, ராஜ்பகதூரின் நண்பர் ராமராஜன் ஆகிய நால்வர் மீதும் பாலியல் வன்கொடுமை உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், ராஜ்பகதூரையும், ராமராஜனையும் கைது செய்தனர். ராஜாராமனும், கவுசல்யாவும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இத்தகவலை தேவியின் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாரிடம் நடந்த சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தேவியின் தரப்பில் தவறு ஏதும் இல்லை என்று தெரிந்துகொண்ட மாப்பிள்ளை வீட்டார் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum