Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு

Go down

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு Empty வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு

Post by oviya Tue Jun 23, 2015 3:04 pm

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
மாகாண சபையின் 31 வது அமர்வு இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் மாகாணசபை உறுப்பினரை அவமரியாதை செய்த அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 9 மணியளவில் சபா மண்டபத்திற்கு முன்பாக கூடிய மாகாணசபை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுகளை நடத்த விடாமல் தடுத்தனர்.





இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சி தலைவர்களுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் காலை 11.30 மணியளவில் சபையை கூடி பின்னர் குறித்த அரசாங்க அதிபர் இடமாற்றம் தொடர்பான பேச்சுக்களை பதிவு செய்த பின்னர் சபை ஒத்திவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையில் தற்போது கருத்து பதிவு இடம்பெறுவதுடன் சபை ஒத்திவைக்கப்படவுள்ளது.

வவுனியா அரச அதிபரை மாற்ற நடவடிக்கை இல்லை! வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்!

வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாமையினை கண்டித்து, இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பல தடவைகள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையில் சுட்டிக்காட்டியபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த மாகாணசபை அமர்வு தாமதமாகியுள்ள நிலையில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum