Top posting users this month
No user |
மிக வேகமாக குறைந்து வரும் இந்தியாவின் நிலத்தடி நீர்ப்பரப்பு: நாஸா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
மிக வேகமாக குறைந்து வரும் இந்தியாவின் நிலத்தடி நீர்ப்பரப்பு: நாஸா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் சிந்து சமவெளி நீர்ப்பரப்பில் உள்ள நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்தின் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து கொண்டே வருவதாக நாஸாவின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
2003 முதல் 2013 வரை உலகின் மிகப்பெரிய 37 நிலத்தடி நீர்ப்பரப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதில் 13 நீர்ப்பரப்புகள் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பவை. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் சிந்து சமவெளி நீர்ப்பரப்பில் உள்ள நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து வருவதில் 2வது இடத்தில் உள்ளது.
60 மில்லியன் மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் அரேபியன் நிலத்தடி நீர்பரப்பு முதல் இடத்தில் உள்ளது.
நாஸா-வின் GRACE (Gravity Recovery and Climate Experiment) சேட்டிலைட் மூலம் முதல் முறையாக உலகின் நிலத்தடி நீர்ப்பரப்பு குறித்த இந்த ஆராய்ச்சி சாத்தியமாகியுள்ளது.
மேலும், நிலத்தடி நீர் குறையும் வேகம், அது மீண்டும் நிரம்பும் வேகத்தைவிட அதிகமாக உள்ளது.
நீர்ப்பாசனம் மூலம் கொஞ்சம் நீர் மீண்டும் நிலத்தடி நீர்ப்பரப்புக்கு சென்றாலும், அவை பெரும்பாலும் புவியின் வெப்பத்தில் ஆவியாகி விடுகின்றன அல்லது வீணாக கடலில் சென்று கலந்து விடுகின்றன.
மேலும், நாஸாவில் பணிபுரியும் உலக புகழ்பெற்ற நீர் ஆராய்ச்சியாளர் Jay Famiglietti, நிலத்தடி நீர் குறைந்துவரும் பிரச்சனையுடன் புவி வெப்பமடைதலும், காலநிலை மாற்றமும் சேருவது இன்னும் சிக்கல் என்று எச்சரித்துள்ளார்.
உலகத்தின் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து கொண்டே வருவதாக நாஸாவின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
2003 முதல் 2013 வரை உலகின் மிகப்பெரிய 37 நிலத்தடி நீர்ப்பரப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதில் 13 நீர்ப்பரப்புகள் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பவை. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் சிந்து சமவெளி நீர்ப்பரப்பில் உள்ள நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து வருவதில் 2வது இடத்தில் உள்ளது.
60 மில்லியன் மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் அரேபியன் நிலத்தடி நீர்பரப்பு முதல் இடத்தில் உள்ளது.
நாஸா-வின் GRACE (Gravity Recovery and Climate Experiment) சேட்டிலைட் மூலம் முதல் முறையாக உலகின் நிலத்தடி நீர்ப்பரப்பு குறித்த இந்த ஆராய்ச்சி சாத்தியமாகியுள்ளது.
மேலும், நிலத்தடி நீர் குறையும் வேகம், அது மீண்டும் நிரம்பும் வேகத்தைவிட அதிகமாக உள்ளது.
நீர்ப்பாசனம் மூலம் கொஞ்சம் நீர் மீண்டும் நிலத்தடி நீர்ப்பரப்புக்கு சென்றாலும், அவை பெரும்பாலும் புவியின் வெப்பத்தில் ஆவியாகி விடுகின்றன அல்லது வீணாக கடலில் சென்று கலந்து விடுகின்றன.
மேலும், நாஸாவில் பணிபுரியும் உலக புகழ்பெற்ற நீர் ஆராய்ச்சியாளர் Jay Famiglietti, நிலத்தடி நீர் குறைந்துவரும் பிரச்சனையுடன் புவி வெப்பமடைதலும், காலநிலை மாற்றமும் சேருவது இன்னும் சிக்கல் என்று எச்சரித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum