Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்த்துவது என்பது பாரிய சவால்: ஷிப்லி பாறூக்

Go down

குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்த்துவது என்பது பாரிய சவால்: ஷிப்லி பாறூக் Empty குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்த்துவது என்பது பாரிய சவால்: ஷிப்லி பாறூக்

Post by oviya Fri Jun 12, 2015 3:19 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கடந்த 1990 ஆம் ஆண்டுக்கு முன்பு குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்த்துவது என்பது ஓரு பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த காணிப் பிரச்சினை சம்பந்தமாக கடந்த இரண்டரை வருடங்களாக செங்கலடி பிரதேச செயலகத்திற்கும், காணி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அலைந்து திருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரான என்னிடம் அப் பிரதேச மக்கள் தெரிவித்த போது, இவ் விடயம் சம்பந்தமாக செங்கலடி பிரதேச செயலகத்திற்கு சென்று விசாரித்து அந்தக் காணிகளை மீளளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தேன்.

இருந்த போதிலும் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அணுகுவதென்பது முஸ்லிம்களை பொருத்தமட்டில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum