Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றவும்: வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

Go down

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றவும்: வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்       Empty வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றவும்: வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

Post by oviya Fri Jun 12, 2015 3:10 pm

வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திரவை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
10.06.2015 ஆம் திகதி வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட அரச அதிபரை அந்த மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு தங்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதியை 17.03.2015ஆம் திகதிய வடக்கு மாகாண சபையின் அமர்வின்போது சமர்ப்பித்து,

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்வதற்கு இந்தச் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொருத்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல உறுப்பினர்களும் 09.06.2015ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்தவுடன் சபா மண்டபத்தில் நடுவே எமக்கு முன்பாக நின்று தமது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனும் தொடர்பு கொண்டு பொருத்தமன நடவடிக்கை எம்மால் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தத்தமது ஆசனங்களுக்குத் திரும்பினர்.

ஜனாதிபதி அவர்களே, இது முழுமையான சிறப்புரிமை மீறல் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதித்த செயல் சம்பந்தப்பட்டதாகும்.

இதில் இனரீதியான கோணம் எதுவுமில்லை. ஏனெனில் ஆட்சேபனை தெரிவித்தவர்கள் யாவரும் தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆகையால் வவுனியா மாவட்ட அரச அதிபரை மிக விரைவில் அந்த மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு விநயமாக வேண்டுகிறோம் என்றுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum