Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவார்களென நம்புகின்றோம்: மங்கள சமரவீர

Go down

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவார்களென நம்புகின்றோம்: மங்கள சமரவீர Empty புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவார்களென நம்புகின்றோம்: மங்கள சமரவீர

Post by oviya Thu Jun 11, 2015 3:01 pm

கடந்த காலத்தில் விடப்பட்ட பிழைகள் திரும்பவும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாமல், இருப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பொது ஒழுங்கு, கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து இன்று காலை 10 மணியளவில் இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்கள் கையளித்துள்ளது.

இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்துவ மத விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க, எம்.என்.சத் ரணசிங்க குடிவரவு-குடியகல்வு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு செயலாளர் சி. வாகிஸ்வரன் மற்றும் பொது ஒழுங்குமற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் மங்கள,

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் 15 இலட்சத்திற்கும் (1½கோடி) மேற்பட்ட இலங்கையர்களில் சிலரினால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டவொரு நடவடிக்கையாகும்.

உண்மையிலேயே 1987ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளிலுள்ள 34,000 இலங்கையர்கள் மட்டுமே இத்தகைய உறுதியான பொறுப்பேற்பைச் செய்துள்ளனர்.

உங்களில் சிலர் முன்னதாகவே பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கு மிகவும் விரும்பியிருந்தமையைப் பற்றியும் ஆனால் இந்நோக்கத்திற்கான வசதி கடந்த சில ஆண்டுகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையைப் பற்றியும் ஐயத்துக்கிடமின்றி நாம் அறிந்திருக்கின்றோம்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் உண்மையான பெறுமதியைப்பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் உணர்ந்த நிலையிலுள்ளதுடன், உங்கள் அனைவரையும் எமது பிரசைகளாக நாம் வரவேற்கின்றோம்.

வெளிநாடுகளில் இலங்கையின் கொடியைத் தற்போது தாங்கிக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும் இந்நாட்டின் பிரஜைகளேயாவீர்கள்.

இலங்கையின் குடியியல், பொருளாதார, கலாசார வாழ்க்கையின் சகல அமிசங்களிலும் தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட பங்குபற்றுதலை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கை எமது தாய் நாடாகும். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து நாம் எம்மை வெவ்வேறு வழிமுறைகளில் அதாவது இன, மத, மொழியியல் ரீதியாகப் பிரிக்கப்படுவதற்கு இடமளித்துள்ளோம்.

இவை எப்படியானவைகளாகவிருந்த போதிலும் நாம் துன்பப்பட்டுள்ளோம். நாம் எமது நாட்டின் சகல பாகங்களிலும் வன்செயல் காரணமாக எமது சிறந்த வாழ்க்கை முன்னேற்றங்களை இழந்துள்ளோம்.

நாம் பெருமளவில் வன்செயல்களைக் கண்டுள்ளோம். இது மனத்தளவிலும் ஆன்ம ரீதியிலும் நாம் ஐக்கியப்படுவதற்கான காலமாகும்.

இந்நாடு எம்மை இணைக்க வேண்டியுள்ள பொதுவெளியாகவுள்ளது. அதாவது இந்நாடானது இந்நாட்டில் வசிக்கும் எம்மையும் எமது நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்ற உங்களையும் இணைக்கும் வெளியாகவுள்ளது.

கடந்த காலத்தில் விடப்பட்ட பிழைகள் திரும்பவும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இந்நாட்டு மக்கள் வன்செயலுக்குத் தங்களுடைய புத்திரர்களையும், புத்திரிகளையும் மேலும் இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

நாம் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் கொண்டவொரு நாட்டினமாக ஒன்றுசேர்ந்து இந்நாட்டிலுள்ள தற்காலிக மற்றும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கு நலனை ஏற்படுத்தும் பொது இலக்குகளை எய்துவதற்கு முயற்சி செய்து இலங்கை சகல துறைகளிலும் தனது முழுமையான திறனை எய்துவதை இயலச் செய்தல் வேண்டும்.

உண்மையிலேயே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கூற்றின்படி 2006ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பில் வதிகின்ற மூன்று உறுப்பினர்களில் ஒருவர் கல்வி கற்ற உயர் தொழில் புரிபவராவர்.

இந்த அமைப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு இலங்கையை தாய் நாடாகக் கொண்ட 8000ற்கும் மேற்பட்ட சட்டம் இயற்றுபவர்களையும் சிரேஸ்ட உத்தியாகத்தர்களையும் முகாமையாளர்களையும் கொண்டுள்ளதாக மதிப்பிடுகின்றது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்றவர்கள் வெளிநாடுகளிலுள்ள அநேக நாட்டினங்களின் விஞ்ஞானத்தினதும், தொழினுட்பத்தினதும் முன்னேற்றத்திற்கும் நிதியைத் தேடிப் பின்தொடர்தல் மற்றும் செல்வத்தை ஈட்டுதல் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கான தங்களுடைய பங்களிப்பைச் செய்முறையில் காண்பித்துள்ளனர்.

தற்போது இவர்களை வரவேற்பதற்கு இலங்கை தனது கதவுகளைத் திறந்து வைத்திருப்பதனால் இவர்கள் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் அபிவிருத்தி நோக்கி இலங்கை மேற்கொண்டுள்ள பதிய பிரயாணத்தில் பங்காளிகளாகவிருப்பதன் பொருட்டு இந்த வரவேற்பை ஏற்று அதற்கு அனுசரணை வழங்குவதன் பொருட்டு இலங்கைக்குத் திரும்பிவருவார்களென நாம் நம்புகின்றோம்.

இவர்கள் எமது அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும் எமது சிந்தனையை மேம்படுத்துவதற்கும் எமக்கு உதவுவதன் பொருட்டு ஆண்டுகளின் போக்கில் தாங்கள் பெற்ற திறனையும் தேர்ச்சியையும் பயன்படுத்துவார்கள் என நாம் நம்புகின்றோம்.

மோதலின் நீண்ட ஆண்டுக்காலப் பகுதியில் ஏற்பட்ட மூளைசாலிகளின் வெளியேற்றம் காரணமாக எற்பட்ட பின்னடைவை மாற்றியமைப்பதற்கு நாம் கடினமாக உழைத்து தற்போது இலங்கை அதன் வரலாற்றிலான இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மூளைசாலிகளின் வருகையின் நிமித்தம் சகல நலன்களையும் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற பிரஜைகள் எம்மை நெருக்கமாக ஒன்றாகக் கொண்டு வருவதற்கும் திரும்பவும் நாம் ஒன்றாகப் பிரயாணம் மேற்கொள்வதை இயலச் செய்வதற்குமான ஓர் பாலமாகத் திகழக்கூடிய ஓர் சிறப்புரிமை நிலையிலுள்ளனர்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்கள் ஈடுபடுவதையும் பங்களிப்புச் செய்வதையும் ஊக்குவிப்பதன் பொருட்டு இந்த அமைச்சு இவ்வாண்டில் பின்னர் ஓர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்கள் வைபவமொன்றை ஒழுங்குபடுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum