Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு கொடுப்பதில் கவனம் செலுத்துவோம்: சீமான்

Go down

தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு கொடுப்பதில் கவனம் செலுத்துவோம்: சீமான் Empty தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு கொடுப்பதில் கவனம் செலுத்துவோம்: சீமான்

Post by oviya Fri Jun 05, 2015 3:26 pm

கோவையில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என்று சீமான் பேசியுள்ளார்.
கோவை பீளமேடு புதூரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலைமை உயரவில்லை. எனவே அவர்களை அகற்றி, மாற்று அரசியலுக்கு வழிவகுப்போம்.

இதற்காக வரும் சட்டமன்ற தேர்தலை ஒரு யுத்த களமாக பயன்படுத்த உள்ளோம்.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் அல்லது எங்கள் தலைமையை ஏற்க முன்வரும் கட்சிகளுடன் தேவைப்பட்டால் கூட்டணி அமைப்போம்.

தமிழ்நாட்டில் பணநாயகத்தை அகற்றி, ஜனநாயகத்தை காப்பதுதான் எங்கள் கட்சியின் முக்கிய குறிக்கோளாகும்.

தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என்றும் இதற்காக தமிழக மக்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

நிருபர்களிடம் சீமான் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளையும் பிரித்து பணிகளை செய்து வருகிறோம்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளதால் அதில் போட்டியிட்டு தோற்பதை விட கவுரவமாக விலகிக்கொள்வது நல்லது.

நாங்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்று அரசியல் கட்சியாக உள்ளோம்.

மேலும், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களிடம் நாங்கள் விளக்கி பேசுவோம் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum