Top posting users this month
No user |
திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம்
Page 1 of 1
திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம்
திஸ்ஸ அத்தநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட போலி உடன்படிக்கையினால், பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு பாரியளவு வாக்குகள் கிடைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவிற்கு அளித்த வாக்கு மூலத்தில் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் திகதி திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு ஓர் ஆவணத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த ஆவணம் இனää மதங்களுக்கு இடையில் குரோதம் ஏற்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையில் இனக்குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தலின் இறுதி நேரத்தில் ஆவணத்தை வெளியிட்டதனால் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கவிருந்த வாக்குகளின் எண்ணிக்கை கனிசமானளவு வீழ்ச்சியடைந்தது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கபீர் ஹாசிம் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் குறித்து அண்மையில் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டனர்.
வடக்கிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவதற்கு இணங்குவதாக பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டுள்ளதாக இந்த ஆவணத்தை திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதுடன், திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ஆவண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவிற்கு அளித்த வாக்கு மூலத்தில் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் திகதி திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு ஓர் ஆவணத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த ஆவணம் இனää மதங்களுக்கு இடையில் குரோதம் ஏற்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையில் இனக்குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தலின் இறுதி நேரத்தில் ஆவணத்தை வெளியிட்டதனால் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கவிருந்த வாக்குகளின் எண்ணிக்கை கனிசமானளவு வீழ்ச்சியடைந்தது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கபீர் ஹாசிம் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் குறித்து அண்மையில் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டனர்.
வடக்கிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவதற்கு இணங்குவதாக பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டுள்ளதாக இந்த ஆவணத்தை திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதுடன், திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ஆவண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum