Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லண்டனிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தமிழர் பேரவை சந்திப்பு

Go down

லண்டனிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தமிழர் பேரவை சந்திப்பு Empty லண்டனிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தமிழர் பேரவை சந்திப்பு

Post by oviya Wed Jun 03, 2015 3:22 pm

பிரித்தானிய தமிழர் பேரவையின் நீண்ட கால சமூக பங்குதார அமைப்பான, பிரித்தானியாவின் இந்துமா சபை லண்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை அண்மையில் சந்தித்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாக இந்திய பிராந்திய தமிழ் மக்களின் நீதி மற்றும் சுதந்திரம் பெறும் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கி முக்கிய பங்கு வகிக்கின்றது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் வட,கிழக்கில் உள்ள மக்களின் தேவைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இதனை புதிய அரசாங்கத்திடம், இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என குறித்த பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் தேசிய இனத்தின் நீண்டகால மூலோபாய நலன்களை கருத்திற் கொண்டும், அவர்கள் தங்கள் தாய் நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் முன்மொழியப்பட்டுள்ளது.

எங்களின் நீண்டகால திட்டம் இந்தியாவுடன் அரசியல், பொருளாதார, இராஜதந்திரத்தில் நெருங்கிய தொடர்புடன் இருப்பதற்கு, புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இணைந்து பகிர்ந்து செயற்பட வேண்டும்.

இதன் மூலம் இந்த பகுதியில் நல்லிணக்கம், உறுதிப்பாடு, அமைதியை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும், அத்துடன் இந்தியாவின் தென்பகுதி பாதுகாப்பிற்கு இது உதவும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவுடன் மிக நீண்டகால சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் மத சார்பு தொடர்பையும் கொண்டுள்ளார்கள்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் புதுடில்லியில் உள்ள அரசியல் கட்சிகளை கொண்டு நாம் இந்நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டோம்.

தமிழர்களுக்கான போராட்டத்தில் இந்தியா கையாண்டது பற்றி வரலாற்று குறைகள் இருந்த போதிலும், நாம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இந்தியா மற்றும் தமிழர்களுக்கிடையிலான மூலோபாய பிணைப்புகளை ஏற்படுத்துவதற்கும் கூடுதலாக, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியாவிற்கிடையிலான அபிவிருத்தி நடவக்கைகளுக்காக லண்டன் மற்றும் புது டில்லி இராஜதந்திர சந்திப்புக்கள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum