Top posting users this month
No user |
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு
Page 1 of 1
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுமார் 100 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே துரித கதியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசியலமைப்புச் சபைக்கு பெண் பிரதிநிதித்துவம் அவசியம் எனக் கூறியுள்ளார்.
எந்த செல்லுப்படி தன்மையுமின்றி புதிய ரூபா நாணயத்தாளில் கையெழுத்திட்டமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரண்டு விவாதம் ஒன்றை பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுமார் 100 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே துரித கதியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசியலமைப்புச் சபைக்கு பெண் பிரதிநிதித்துவம் அவசியம் எனக் கூறியுள்ளார்.
எந்த செல்லுப்படி தன்மையுமின்றி புதிய ரூபா நாணயத்தாளில் கையெழுத்திட்டமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரண்டு விவாதம் ஒன்றை பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum