Top posting users this month
No user |
ஓய்வு பெற வேண்டிய மஹிந்த மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சி: ரஞ்சித் மத்தும பண்டார
Page 1 of 1
ஓய்வு பெற வேண்டிய மஹிந்த மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சி: ரஞ்சித் மத்தும பண்டார
ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சித்து வருவதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மொனராகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மீளவும் அரசியலில் ஈடுபட முயற்சிக்கின்றார்.
தற்போது விஹாரைகள் தோறும் சென்று அரசியல் செய்கின்றார்.
20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனையும் அவர் சீர்குலைக்க முயற்சிக்கின்றார்.
புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ தேர்தல் நடத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கும்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முன்வைத்திருந்தது.
பத்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்த போது ஏன் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .
மொனராகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மீளவும் அரசியலில் ஈடுபட முயற்சிக்கின்றார்.
தற்போது விஹாரைகள் தோறும் சென்று அரசியல் செய்கின்றார்.
20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனையும் அவர் சீர்குலைக்க முயற்சிக்கின்றார்.
புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ தேர்தல் நடத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கும்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முன்வைத்திருந்தது.
பத்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்த போது ஏன் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum