Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்வியினால் ஏற்படுத்தப்படும் மனித முன்னேற்றத்துடனான அபிவிருத்தியே கிராமத்தின் உண்மையான வளர்ச்சி

Go down

கல்வியினால் ஏற்படுத்தப்படும் மனித முன்னேற்றத்துடனான அபிவிருத்தியே கிராமத்தின் உண்மையான வளர்ச்சி Empty கல்வியினால் ஏற்படுத்தப்படும் மனித முன்னேற்றத்துடனான அபிவிருத்தியே கிராமத்தின் உண்மையான வளர்ச்சி

Post by oviya Sun May 31, 2015 3:09 pm

கல்வியின் மூலம் ஏற்படுத்தப்படும் மனித முன்னேற்றத்துடன் அபிவிருத்தியுமே எமது கிராமத்தின் உண்மையான வளர்ச்சிப்பாதையில் சமூக முன்னேற்றத்தில் சிந்திக்கும் ஆற்றலுடைய மக்களாக உருவாக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.
எருவில் பெத்தான்குடி ஒன்றியம் நடாத்திய கௌரவிப்பு நிகழ்வானது நேற்று இரவு எருவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் பெத்தான்குடி தலைவரும் முன்னால் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான எஸ்.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்றது.

ஆலயத்தின் சிறப்பு, கல்வெட்டின் பெருமைகள் என்பனவற்றின் மூலம் ஒரு கிராமத்தின் தன்மை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டப்படும்.

உண்மையில் சமூகத்திற்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்தும் இவ்வாறானவர்களுக்கு பாராட்டி கௌரவம் வழங்கப்படுவதனையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்வியின் சிறப்பு பெற்று விளங்கும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வானது அவர்களை இந்த சமூகத்தில் தன்னை முதன்மையானவர்களாக மாற்றுகின்ற தன்னம்பிக்கையினை அதிகரிக்கச்செய்வதுடன் தாங்கள் பெற்றுக்கொண்ட விருதுகளுக்கு மீண்டும் இந்த சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேணடிய கடன்காரர்களாகவும் மாற்றிவிட்டிருக்கின்றது.

இதுமாத்திரமல்ல இவ்வாறான நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெறுகின்றபோது ஆலயமும் சிறப்புற்று விளங்கும்.

அத்தோடு இவ்வாறான ஊக்குவிப்பு செயற்பாடுகள் எதிர்காலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உந்து சக்கதியாகவும் தாங்களும் எதிர்வரும் காலங்களில் கல்வியில் அதியுயர் சித்திகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தங்களது கற்றலை மேம்படுத்தி பாராட்டு பெறுவதற்கு உழைப்பார்கள்.

எதிர்காலத்திலும் எருவில் கிராமத்தில் கல்வியின் சிறப்பு மேலோங்கி மிளிரவேண்டும்.

யார் யாரெல்லாம் சக்தியுள்ளவர்களாக இருக்கின்றார்களோ! யார் யாரெல்லாம் இன்னொருவரின் துன்பத்திலும் ஏழ்மையிலும் கைகொடுக்கின்றார்களோ அவர்கள் அந்த சமூகத்தில் வலிமையுள்ளவர்களாக திகழ்ந்து வலிமை குறைந்தவர்களை உயரத்திவிட பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் மா.உலகேஸ்பரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மற்றும் சிறப்பு அதிதிகளாக எருவில் கண்ணகி மகா வித்தியாலய அதிபர் எஸ்.பரமானந்தம், மற்றும் ஆலய நிர்வாகிகள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» உண்மையான ஆளுமைத்திறன் எது?
» உடல் உள ஆரோக்கியமே உண்மையான முன்னேற்றம்: ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum