Top posting users this month
No user |
முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவில்லை!
Page 1 of 1
முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவில்லை!
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல முடியாது என்ற நீதிமன்ற தடை இல்லாத காரணத்தினாலேயே, விமான நிலையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரை நாட்டைவிட்டுச் செல்வதைத் தடுக்கவோ அல்லது அவரைக் கைது செய்யவோ முடியாமல் போனது.
பொலிஸ் அதிகாரியொருவர் விமானநிலையத்தில் இருந்திருந்தால் மாத்திரமே அவரைக் கைது செய்திருக்க முடியும். இருப்பினும் அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் எவரும் இருந்திருக்கவில்லை.
பிரதி அமைச்சர் மீண்டும் நாட்டுக்கு வந்த பின்னரே அவரை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல முடியாது என்ற நீதிமன்ற தடை இல்லாத காரணத்தினாலேயே, விமான நிலையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரை நாட்டைவிட்டுச் செல்வதைத் தடுக்கவோ அல்லது அவரைக் கைது செய்யவோ முடியாமல் போனது.
பொலிஸ் அதிகாரியொருவர் விமானநிலையத்தில் இருந்திருந்தால் மாத்திரமே அவரைக் கைது செய்திருக்க முடியும். இருப்பினும் அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் எவரும் இருந்திருக்கவில்லை.
பிரதி அமைச்சர் மீண்டும் நாட்டுக்கு வந்த பின்னரே அவரை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum