Top posting users this month
No user |
ஐ.ம.சு.கூட்டணி கட்சித் தலைவர்கள் - மஹிந்த இன்று சந்திப்பு
Page 1 of 1
ஐ.ம.சு.கூட்டணி கட்சித் தலைவர்கள் - மஹிந்த இன்று சந்திப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுவதற்கு அவசியமான பின்னணியை அமைத்துக்கொள்வதற்காக அதன் தலைவர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சி தலைவர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்கள்.
கூட்டணியில் தொடர்புடைய 14 கட்சி தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் கூட்டணியின் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப் போது எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதனால் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஐ.ம.சு.கூட்டணி பெற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் பொது தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடப்படவுள்ள விடயம் தொடர்பில் கூட்டணி கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டிற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நினைத்தாலும் அவ்வாறான எவ்வித பிளவுகளும் காணப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரபல கூட்டணி மற்றும் மேலும் அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியினை பெற்றுக்கொள்ளவுள்ளளோம் என கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சி தலைவர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்கள்.
கூட்டணியில் தொடர்புடைய 14 கட்சி தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் கூட்டணியின் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப் போது எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதனால் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஐ.ம.சு.கூட்டணி பெற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் பொது தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடப்படவுள்ள விடயம் தொடர்பில் கூட்டணி கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டிற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நினைத்தாலும் அவ்வாறான எவ்வித பிளவுகளும் காணப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரபல கூட்டணி மற்றும் மேலும் அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியினை பெற்றுக்கொள்ளவுள்ளளோம் என கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum