Top posting users this month
No user |
Similar topics
முஸ்லிம் என்ற காரணத்தினால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவித்த இளம் பெண்
Page 1 of 1
முஸ்லிம் என்ற காரணத்தினால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவித்த இளம் பெண்
மும்பையில் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டுமே பல பகுதிகளில் தேடியும் வாடகைக்கு ஒரு வீடு கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் வளர்ந்த மிஸ்பா கத்ரி (25) 2002 கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தை கண் முன்னே கண்டவர்.
இவர் பணி நிமித்தமாக அண்மையில் மும்பைக்கு இடம் பெயர்ந்த போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் மும்பைக்கு வந்தபோது நகரத்தில் எனக்குரிய மரியாதை கிடைக்கும் என்றே நினைத்தேன்.
வீடு தேடி பல நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது மும்பை வதாலா பகுதியில் சாங்வி ஹைட்ஸ் எனுமிடத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடு கிடைத்தது.
ஃபேஸ்புக் மூலம் அந்த பிளாட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்களை நேரில் சென்று சந்தித்தேன்.
அந்த இருவரும் வேலை பார்க்கின்றனர். அந்த பிளாட்டை என்னுடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர்.
இந்நிலையில், அந்த பிளாட்டுக்கு குடிபெயர்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு, குடியிருப்பின் இடைத்தரகர் என்னிடம் அந்த குடியிருப்பின் சட்டத்திட்டங்களின்படி முஸ்லிம்களை வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.
அதையும் மீறி அந்த பிளாட்டுக்கு குடிவர விரும்பினால் அங்குள்ளவர்களால் ஏதாவது மனக்கசப்புக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கு ஆட்சேபனை இல்லை, அத்தகைய நிகழ்வுகளுக்கு கட்டிட உரிமையாளரோ, இடைத்தரகரோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்று தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.
இந்த விதிகளை ஏற்க மறுத்த நான் இதற்கு முன்பு இருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிவதால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நாளில் புது வீட்டில் குடிபெயர்ந்தேன்.
குடிபுகுந்துவிட்டால் நிலைமை சரியாகிவிடும் என நம்பிய நிலையில், ஒருவார காலத்துக்குப் பின்னர் அந்த நபர் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார்.
எதிர்ப்பை மீறியும் குடி பெயர்ந்ததால் பொலிஸில் புகார் அளித்து என்னை அப்புறப்படுத்துவதாக மிரட்டினார்.
குடியிருப்பின் கட்டுமான நிறுவனத்தை அணுகியபோது, முஸ்லிம்களுக்கு வீடு தருவதில்லை என்பது எங்களது கொள்கை என்று மட்டும் கூறினர்.
அதன்பின், பிளாட்டை காலி செய்ய எனக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டதால் காலி செய்தேன்.
என்னை தங்களது பிளாட்டில் அனுமதித்ததற்காக அங்கிருந்த 2 பெண்களும் வீட்டை காலி செய்ய நேர்ந்தது.
தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் கதவுகளை தட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வளர்ந்த மிஸ்பா கத்ரி (25) 2002 கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தை கண் முன்னே கண்டவர்.
இவர் பணி நிமித்தமாக அண்மையில் மும்பைக்கு இடம் பெயர்ந்த போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் மும்பைக்கு வந்தபோது நகரத்தில் எனக்குரிய மரியாதை கிடைக்கும் என்றே நினைத்தேன்.
வீடு தேடி பல நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது மும்பை வதாலா பகுதியில் சாங்வி ஹைட்ஸ் எனுமிடத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடு கிடைத்தது.
ஃபேஸ்புக் மூலம் அந்த பிளாட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்களை நேரில் சென்று சந்தித்தேன்.
அந்த இருவரும் வேலை பார்க்கின்றனர். அந்த பிளாட்டை என்னுடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர்.
இந்நிலையில், அந்த பிளாட்டுக்கு குடிபெயர்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு, குடியிருப்பின் இடைத்தரகர் என்னிடம் அந்த குடியிருப்பின் சட்டத்திட்டங்களின்படி முஸ்லிம்களை வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.
அதையும் மீறி அந்த பிளாட்டுக்கு குடிவர விரும்பினால் அங்குள்ளவர்களால் ஏதாவது மனக்கசப்புக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கு ஆட்சேபனை இல்லை, அத்தகைய நிகழ்வுகளுக்கு கட்டிட உரிமையாளரோ, இடைத்தரகரோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்று தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.
இந்த விதிகளை ஏற்க மறுத்த நான் இதற்கு முன்பு இருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிவதால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நாளில் புது வீட்டில் குடிபெயர்ந்தேன்.
குடிபுகுந்துவிட்டால் நிலைமை சரியாகிவிடும் என நம்பிய நிலையில், ஒருவார காலத்துக்குப் பின்னர் அந்த நபர் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார்.
எதிர்ப்பை மீறியும் குடி பெயர்ந்ததால் பொலிஸில் புகார் அளித்து என்னை அப்புறப்படுத்துவதாக மிரட்டினார்.
குடியிருப்பின் கட்டுமான நிறுவனத்தை அணுகியபோது, முஸ்லிம்களுக்கு வீடு தருவதில்லை என்பது எங்களது கொள்கை என்று மட்டும் கூறினர்.
அதன்பின், பிளாட்டை காலி செய்ய எனக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டதால் காலி செய்தேன்.
என்னை தங்களது பிளாட்டில் அனுமதித்ததற்காக அங்கிருந்த 2 பெண்களும் வீட்டை காலி செய்ய நேர்ந்தது.
தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் கதவுகளை தட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமணங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் குரங்குகள்: ஆக்ராவில் நடக்கும் வினோதம்
» முஸ்லிம் அமைப்புகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது! இலங்கைப் பெண் விவகாரம் மீள்விசாரணை
» சொந்த வீடு வளவினைப் பார்து விட்டு வரச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை
» முஸ்லிம் அமைப்புகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது! இலங்கைப் பெண் விவகாரம் மீள்விசாரணை
» சொந்த வீடு வளவினைப் பார்து விட்டு வரச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum