Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்

Go down

வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம் Empty வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்

Post by oviya Wed May 27, 2015 1:50 pm

நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் 12 வீடுகளை சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளினால் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தோட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் பீ.எச்.டி.டி நிறுவனமும் இணைந்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் 12 வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை தோட்ட நிர்வாகம் ஒதுக்கியது.



வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் இம்மாதம் 2 ஆம் திகதி அன்று நாட்டப்பட்டது. இதன் போது அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். 08.05.2015 அன்று 12 வீடுகள் கட்டுவதாக கூறி நிலத்தை அளவெடுத்த பின் 19.05.2015 அன்று 10 குடும்ப அங்கத்தவர்களை மாத்திரம் அழைத்து வீட்டு இலக்கங்களை குழுக்கள் முறையில் வழங்கி 20.05.2015 அன்று மீண்டும் நிலத்தினை 10 குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம் வழங்கியுள்ளார்கள்.

தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடமும் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 12 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதோடு அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அத்துடன் வீடுகள் கட்டுவதற்கான ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகளை கட்டி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum