Top posting users this month
No user |
இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லீம் மக்கள்!
Page 1 of 1
இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லீம் மக்கள்!
உலகிலேயே மிகப்பெரிய இந்துகோயிலை கட்டுவதற்காக பீகார் முஸ்லீம்கள் தங்களது நிலங்களை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் அளவுக்கு உலகின் மாபெரும் இந்துக் கோவில் ஒன்று இந்தியாவில் உருவாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள அந்த மகாவீர் கோயிலுக்காக சுமார் 50 ஏக்கர் நிலத்தை இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அளித்துள்ளனர்.
இந்த மகாவீர் கோயில் 2,500 அடி நீளம், 1,296 அடி அகலம், 379 அடி உயரத்துடன் சுமார் 200 ஏக்கர் நிலபரப்பில் கட்ட திட்டமிடப்படுள்ளது.
ராமர், சீதை, லவ-குசாவுக்கு தனி சிலைகளுடன் கட்டப்படும் இந்த கோயில் வளாகத்தில் 18 சிறிய கோயில்களும், உலகிலேயே மிகப்பெரிய சிவ லிங்கமும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேபாளத்தின் எல்லைப்பகுதியில் கட்டப்படும் இந்த கோயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது.
இந்நிலையில், மதநல்லிணக்கத்தை தழைக்கச் செய்யும் பொருட்டு இந்த கோவிலுக்காக பீகார் முஸ்லிம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார்.
இந்த கோயிலை மிக விரைவில் கட்டிமுடிக்க வேண்டும் என அப்பகுதி முஸ்லீம் மக்கள் அக்கறை காட்டி வருவதாக கோயில் கட்டுமானப் பணிகளை முன்நின்று நடத்திவருபவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் அளவுக்கு உலகின் மாபெரும் இந்துக் கோவில் ஒன்று இந்தியாவில் உருவாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள அந்த மகாவீர் கோயிலுக்காக சுமார் 50 ஏக்கர் நிலத்தை இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அளித்துள்ளனர்.
இந்த மகாவீர் கோயில் 2,500 அடி நீளம், 1,296 அடி அகலம், 379 அடி உயரத்துடன் சுமார் 200 ஏக்கர் நிலபரப்பில் கட்ட திட்டமிடப்படுள்ளது.
ராமர், சீதை, லவ-குசாவுக்கு தனி சிலைகளுடன் கட்டப்படும் இந்த கோயில் வளாகத்தில் 18 சிறிய கோயில்களும், உலகிலேயே மிகப்பெரிய சிவ லிங்கமும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேபாளத்தின் எல்லைப்பகுதியில் கட்டப்படும் இந்த கோயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது.
இந்நிலையில், மதநல்லிணக்கத்தை தழைக்கச் செய்யும் பொருட்டு இந்த கோவிலுக்காக பீகார் முஸ்லிம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார்.
இந்த கோயிலை மிக விரைவில் கட்டிமுடிக்க வேண்டும் என அப்பகுதி முஸ்லீம் மக்கள் அக்கறை காட்டி வருவதாக கோயில் கட்டுமானப் பணிகளை முன்நின்று நடத்திவருபவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum