Top posting users this month
No user |
பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
Page 1 of 1
பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் மாந்திரீகம், பில்லி, சூனியம், ஆவிகளின் உலகம், ஏவல், செய்வினை போன்ற விடயங்களும் மக்களால் அதிகம் நம்பப்படுகிறது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று கூற முடியாமல் இருந்தாலும், அது போன்ற வேலைகள் தனி உலகமாகவே பார்க்க முடிகிறது. இந்த வேலைகளை மந்திரவாதி என்பவன் கச்சிதமாக முடித்து கொடுகிறான்.
அதாவது ஆன்மிகவாதி என்பவன் தனக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல வழிக்கு மட்டும் செலவழிக்கிறான்.
ஆனால் ஆங்கிலத்தில் ‘அக்கல் சயின்டிஸ்டு’ என்று கூறப்படும் மந்திரவாதியோ நன்மை மற்றும் தீய வழிகளுக்கு தனது சக்திகளை செலவழிப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் இத்தகைய வேலைகளை மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற வேலைகளால் மேற்கொள்கின்றனர்.
ஒருவரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தான் நினைத்த காரியங்களை செய்ய வைப்பதையே ‘பில்லி’ என்கிறார்கள்.
அதே போல் ‘சூனியம்’ என்பதும் ஒருவரை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தும் செயலாக இருக்கிறது.
இதன் மூலம் ஒருவரை பொருளாதார ரீதியில் ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். மேலும், கை, கால்களை முடக்குவது, சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது உடலுக்குள் மருந்தை செலுத்துதல், கருவில் இருக்கும் குழந்தையை அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்றவை இடம்பெறுகிறது.
‘ஏவல்’ என்பது தனது கட்டளையை குறிப்பிட்ட நபரை கேட்க வைத்து அவர் மூலம் நினைக்கும் காரியங்களை சாதிப்பதாகும்.
மேலும், சொந்தமாக செயல்படும் ஒருவரை மாந்திரீகம் மூலம் திசை திருப்பி நினைக்கும் விடயங்களை செய்ய வைப்பதை ‘செய்வினை’ என்பர்.
அதே போல ‘வைப்பு’ என்பது மாந்திரீக வழியில் அல்லது மருத்துவ வழியில் ஒரு மருந்தை பிடிக்காதவர்களுக்கு கொடுத்து அவர்களை மன மற்றும் உடல் ரீதியில் முடக்குவதாகும்.
இதற்கு எல்லாம் ஜாதகம், வியர்வை, உடை, முடி, புகைப்படம் இவற்றில் ஏதாவது வேண்டும் என்று கூறுவர்.
இத்தகைய வேலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பலர் கூறியிருப்பதையும் நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
மேலும், மற்றவர்களை வேவு பார்ப்பதற்காக ஆவிகளை ஏவி விடுவார்கள் என்று கூறுவதையும் நாம் கேட்டிருப்போம்.
ஆவிகளின் உலகம் ஒன்று உள்ளதா என்றால், மனோதத்துவ மருத்துவர்கள், அது எல்லாம் ஒருவித மனரீதியான உணர்வே என்று மறுத்துள்ளனர்.
அதே சமயம் அறிவியலின் ‘போலோ கிராம்’ என்ற பகுதி ஆவிகள் இருக்கின்றன என்றும், அவைகள் தங்களுக்கு என்று ஒரு உலகத்தை கொண்டுள்ளது எனவும் சோதனைகள் மூலம் நிரூபித்து வியக்க வைத்துள்ளன.
அதுமட்டுமல்லாது ஆவிகளுடன் பேசுதல் என்ற வழக்கமும் உலகளவில் இருக்கிறது. இந்த வழக்கம் வெளிநாடுகளில் அதிகம் இருக்கிறது.
இதற்கு அந்த தொழிலில் ஈடுபடும் சூனியக்காரர்கள் ஆவிகளுடன் பேச ‘ஓஜா’ என்ற பலகையை பயன்படுத்துகின்றனர்.
சீனாவில் இந்த முறை 1100ம் ஆண்டுகளில் இருந்தே இருக்கிறது என்பது வியக்க வைக்கும் விடயமாகும். அதாவது இந்தியாவில் குறிசொல்வதைப் போல வெளிநாடுகளில் இந்த பழக்கவழக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில், ஏழை மற்றும் படிப்பறிவில்லாத மக்கள் இது போன்ற மயக்கும் வித்தைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் செயல்படுபவர்களும் அத்தகைய மக்களையே குறிவைக்க தொடங்குகின்றனர்.
மாந்திரீக வேலைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் 90 சதவிதம் கிராம மக்களே என்று ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
மோசமான பொருளாதார நிலை, கல்வியறிவின்மை, மற்றவர்களால் ஒடுக்கப்படும் நிலை, மூட நம்பிக்கை, போதிய மருத்துவ வசதியின்மை, கலாச்சார நம்பிக்கை, அறியாமை, உளவியல் பிரச்சனைகள், சமுதாயப் பகை ஆகியவை தான் மாந்திரீகம் மீதும், மந்திரவாதி மீதும் 100 சதவீத நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று கூற முடியாமல் இருந்தாலும், அது போன்ற வேலைகள் தனி உலகமாகவே பார்க்க முடிகிறது. இந்த வேலைகளை மந்திரவாதி என்பவன் கச்சிதமாக முடித்து கொடுகிறான்.
அதாவது ஆன்மிகவாதி என்பவன் தனக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல வழிக்கு மட்டும் செலவழிக்கிறான்.
ஆனால் ஆங்கிலத்தில் ‘அக்கல் சயின்டிஸ்டு’ என்று கூறப்படும் மந்திரவாதியோ நன்மை மற்றும் தீய வழிகளுக்கு தனது சக்திகளை செலவழிப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் இத்தகைய வேலைகளை மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற வேலைகளால் மேற்கொள்கின்றனர்.
ஒருவரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தான் நினைத்த காரியங்களை செய்ய வைப்பதையே ‘பில்லி’ என்கிறார்கள்.
அதே போல் ‘சூனியம்’ என்பதும் ஒருவரை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தும் செயலாக இருக்கிறது.
இதன் மூலம் ஒருவரை பொருளாதார ரீதியில் ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். மேலும், கை, கால்களை முடக்குவது, சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது உடலுக்குள் மருந்தை செலுத்துதல், கருவில் இருக்கும் குழந்தையை அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்றவை இடம்பெறுகிறது.
‘ஏவல்’ என்பது தனது கட்டளையை குறிப்பிட்ட நபரை கேட்க வைத்து அவர் மூலம் நினைக்கும் காரியங்களை சாதிப்பதாகும்.
மேலும், சொந்தமாக செயல்படும் ஒருவரை மாந்திரீகம் மூலம் திசை திருப்பி நினைக்கும் விடயங்களை செய்ய வைப்பதை ‘செய்வினை’ என்பர்.
அதே போல ‘வைப்பு’ என்பது மாந்திரீக வழியில் அல்லது மருத்துவ வழியில் ஒரு மருந்தை பிடிக்காதவர்களுக்கு கொடுத்து அவர்களை மன மற்றும் உடல் ரீதியில் முடக்குவதாகும்.
இதற்கு எல்லாம் ஜாதகம், வியர்வை, உடை, முடி, புகைப்படம் இவற்றில் ஏதாவது வேண்டும் என்று கூறுவர்.
இத்தகைய வேலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பலர் கூறியிருப்பதையும் நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
மேலும், மற்றவர்களை வேவு பார்ப்பதற்காக ஆவிகளை ஏவி விடுவார்கள் என்று கூறுவதையும் நாம் கேட்டிருப்போம்.
ஆவிகளின் உலகம் ஒன்று உள்ளதா என்றால், மனோதத்துவ மருத்துவர்கள், அது எல்லாம் ஒருவித மனரீதியான உணர்வே என்று மறுத்துள்ளனர்.
அதே சமயம் அறிவியலின் ‘போலோ கிராம்’ என்ற பகுதி ஆவிகள் இருக்கின்றன என்றும், அவைகள் தங்களுக்கு என்று ஒரு உலகத்தை கொண்டுள்ளது எனவும் சோதனைகள் மூலம் நிரூபித்து வியக்க வைத்துள்ளன.
அதுமட்டுமல்லாது ஆவிகளுடன் பேசுதல் என்ற வழக்கமும் உலகளவில் இருக்கிறது. இந்த வழக்கம் வெளிநாடுகளில் அதிகம் இருக்கிறது.
இதற்கு அந்த தொழிலில் ஈடுபடும் சூனியக்காரர்கள் ஆவிகளுடன் பேச ‘ஓஜா’ என்ற பலகையை பயன்படுத்துகின்றனர்.
சீனாவில் இந்த முறை 1100ம் ஆண்டுகளில் இருந்தே இருக்கிறது என்பது வியக்க வைக்கும் விடயமாகும். அதாவது இந்தியாவில் குறிசொல்வதைப் போல வெளிநாடுகளில் இந்த பழக்கவழக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில், ஏழை மற்றும் படிப்பறிவில்லாத மக்கள் இது போன்ற மயக்கும் வித்தைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் செயல்படுபவர்களும் அத்தகைய மக்களையே குறிவைக்க தொடங்குகின்றனர்.
மாந்திரீக வேலைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் 90 சதவிதம் கிராம மக்களே என்று ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
மோசமான பொருளாதார நிலை, கல்வியறிவின்மை, மற்றவர்களால் ஒடுக்கப்படும் நிலை, மூட நம்பிக்கை, போதிய மருத்துவ வசதியின்மை, கலாச்சார நம்பிக்கை, அறியாமை, உளவியல் பிரச்சனைகள், சமுதாயப் பகை ஆகியவை தான் மாந்திரீகம் மீதும், மந்திரவாதி மீதும் 100 சதவீத நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum