Top posting users this month
No user |
Similar topics
புதன் பகவான் கோவில்கள்
Page 1 of 1
புதன் பகவான் கோவில்கள்
சூரியனுக்கு மிக அருகிலேயே புதன் கிரகம் உள்ளது. இக்கிரகத்தின் நிறம் பச்சை. கல்விக்கு அதிபதி புதன். உடலில் மூளை, நாக்கு, கைகள், பாதங்கள் ஆகியன புதனுக்குரியவை. கல்வியில் சிறந்து விளங்க புதனைப் பூஜிக்க வேண்டும். சுபர்களுடன் இணைந்திருந்தால் சுபராவார். அசுபர்களுடன் இணைந்துள்ள போதும், சூரியனுடன் மிகவும் நெருங்கி, அஸ்தங்க மடைந்தபோதும் அசுபராவார்.
வாக்கு வன்மை, பேச்சுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிற்கு புத பலமே காரணம். புதன் வக்ரமடையும்போது மூளை பாதிக்கப்படக்கூடும். மூளை சம்பந்த நோய்களும் தோன்றலாம். பேச்சுதிறன் பாதிக்கப்படக்கூடும். நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய நிலையில் இருப் பவர்கள் வழிபட வேண்டிய புதன் அம்சம் உடைய தலங்கள் வருமாறு:-
திருவெண்காடு :
திருவெண்காடு தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஞாயிறுதோறும் இரவு செய்யப்படும் பூஜை நினைத்ததை நிறைவேற்றும், திருவெண்காட்டில் புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சி பெறும் புரட்டாசி மாதமும், ஆட்ச பெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்கள் ஆகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில், புதன் ஓரையில், வழிபட்டுப் பரிகாரம் செய்வது மிக, மிக சிறப்பாகும்.
புதன் அலிக் கிரகமாக இருப்பதால் ஆண்களுக்கு 5-ஆம் இடத்திலும், பெண்களுக்கு 9ஆம் இடத்திலும் சம்பந்தம் பெற்று இருந்தால் புத்திர பாக்கியத் தடை ஏற்படும். எனவே இப்படிப்பட்டவர்கள் இத்தலம் வந்து புதன் பகவானைப் பரிகார பூஜை செய்து வழிபட வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் படிப்புத் தடைப்படும்.
நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே அப்படிப்பட்டவர்களும் அவசியம் இத்தலத்துக்கு வந்து புதன் பகவானுக்குப் பரிகாரம் செய்து வழிபட வேண்டும். எந்த குழந்தையின் ஜாதகத்தில் புதனுக்குப் பலவீனம் அல்லது தோஷம் ஏற்பட்டுள்ளதோ, அவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படும். அத்தகைய ஜாதக அமைப்பை கொண்டவர்கள், புதன் பரிகாரத்தலமாகிய `திருவெண்காடு' சென்று புதன் வழிபட்ட ஸ்ரீஸ்வேதாரயே ஸ்வரணையும், ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகையையும் அவசியம் வழிபட வேண்டும்.
பிறகு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டு திரும்ப வேண்டும். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமய குரவர்களால் பாடல்பெற்ற அரிய தலம் திருவெண்காடு. சிறு வயதிலேயே உலக சுகங்களை துச்சமெனத் தள்ளிவிட்டு துறவியான பட்டினத்தடிகளுக்கு முக்திக்கு வழிகாட்டிய திவ்ய திருத்தலம் இது.
அது மட்டுமின்றி புதனின் தோஷத்தையும், பலவீனத்தையும் உடனுக்குடன் போக்கும் சக்தி கொண்ட தலமும் ஆகும். ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்தில் புதன் பலம் பெற்றிருந்தால், மிகச் சிறந்த கல்வியையும், மற்ற கலைகளில் நிபுணத்துவத்தையும் குறைவில்லாமல் தருவார். புதனுக்கு, மிதுனம் சொந்த ராசி ஆகும்.
கன்னி சொந்த ராசி மட்டுமின்றி, உச்ச ராசியும் ஆகும். புதன், ஜெனன காலத்தில் பலம் இழந்து இருந்தாலும், தோஷத்தை உண்டாக்கும். இதர கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். புதன் மிகவும் சாத்வீகமான கிரகமாகும். எனவே பெரும்பான்மையான புதன் தோஷங்கள் பரிகாரங்களுக்கு உட்பட்டவையே.
படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் புதன் காயத்திரி சொல்லி தினசரி வருவதும், வருடம் ஒருமுறை இத்திருத்தலம் வந்து வழிபடுவதும் அவர்களது கல்வியறிவு பெருகும். படிப்பும், பட்டங்களும் எளிதில் அடையலாம்.
மதுரை :
மதுரை மீனாட்சி அம்மன் தலம் புதன் பகவான் வழிபட்ட திருத்தலமாகும். முதலில் தீர்த்தமாகிய பொற்றாமரைக்குளத்தில் நீராடிவிட்டு, மீனாட்சி அம்மனை வழிபட்டு, அடுத்து சொக்கநாதரையும், கால் மாறி ஆடிய நடராஜரையும், முக்குறுனி விநாயகரையும், சித்தரையும் வழிபட்டு புதன் அருள் பெறலாம்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு :
காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் உள்ள பாதையில் சென்றால், இந்தத் திருக்காலிமேடு, திருக்காலீஸ்வரர் கோவிலை அடையலாம். புதன் பகவான் வழிபட்ட திருத்தலம் இது. இக்கோவிலில் புதன் பகவானின் மூலத் திருமேனி காண்படுகிறது. இறைவன் பெயர்-சத்திய நாதேஸ்வரர். அம்பாள்- உற்சவ அம்பாளாக பிரமராம்பிகை உள்ளார். எனவே புதன் தோஷம் உடையவர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய ஒரு தலம் ஆகும்.
வெற்றிக்கு உதவும் 4 தலங்கள் :
ராசியில் அல்லது லக்னத்தில் புதன் அளவிற்கு மீறிய சுபபலம் பெற்றிருந்தாலும், உலக வாழ்க்கையின் சுகத்திற்கும், வெற்றிக்கும், அது தடங்கலாக இருக்கும். அளவிற்கு அதிகமான பொறுமை, சாந்தம், பணிவு, பிறருக்கு விட்டுக்கொடுப்பது, நியாயமாகத் தனக்கு கிடைக்க வேண்டியதற்கு கூடப்போராடாமல் இருப்பது ஆகியவற்றால் பல நஷ்டங்கள் ஏற்படும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் புதன் அம்சத்துடன் திகழும் அல்லது பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். அத்தகைய தலங்கள் 4 உள்ளன.
1. ஸ்ரீரங்கம் கோவிலினுள் உள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் சன்னதி.
2. திருவஹிந்திரபுரம்- ஸ்ரீஹயக்ரீவர்
3. செட்டிப்புண்ணி யம்-ஸ்ரீயோக ஹயக்ரீவர்.
4. காசி- கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன்பிறகு புதன் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கத்தை வழிபடவும். இது கடுமையான புதன் தோஷத்திற்கு மட்டும் உரிய சிறந்த பரிகாரமாகும்.
வாக்கு வன்மை, பேச்சுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிற்கு புத பலமே காரணம். புதன் வக்ரமடையும்போது மூளை பாதிக்கப்படக்கூடும். மூளை சம்பந்த நோய்களும் தோன்றலாம். பேச்சுதிறன் பாதிக்கப்படக்கூடும். நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய நிலையில் இருப் பவர்கள் வழிபட வேண்டிய புதன் அம்சம் உடைய தலங்கள் வருமாறு:-
திருவெண்காடு :
திருவெண்காடு தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஞாயிறுதோறும் இரவு செய்யப்படும் பூஜை நினைத்ததை நிறைவேற்றும், திருவெண்காட்டில் புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சி பெறும் புரட்டாசி மாதமும், ஆட்ச பெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்கள் ஆகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில், புதன் ஓரையில், வழிபட்டுப் பரிகாரம் செய்வது மிக, மிக சிறப்பாகும்.
புதன் அலிக் கிரகமாக இருப்பதால் ஆண்களுக்கு 5-ஆம் இடத்திலும், பெண்களுக்கு 9ஆம் இடத்திலும் சம்பந்தம் பெற்று இருந்தால் புத்திர பாக்கியத் தடை ஏற்படும். எனவே இப்படிப்பட்டவர்கள் இத்தலம் வந்து புதன் பகவானைப் பரிகார பூஜை செய்து வழிபட வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் படிப்புத் தடைப்படும்.
நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே அப்படிப்பட்டவர்களும் அவசியம் இத்தலத்துக்கு வந்து புதன் பகவானுக்குப் பரிகாரம் செய்து வழிபட வேண்டும். எந்த குழந்தையின் ஜாதகத்தில் புதனுக்குப் பலவீனம் அல்லது தோஷம் ஏற்பட்டுள்ளதோ, அவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படும். அத்தகைய ஜாதக அமைப்பை கொண்டவர்கள், புதன் பரிகாரத்தலமாகிய `திருவெண்காடு' சென்று புதன் வழிபட்ட ஸ்ரீஸ்வேதாரயே ஸ்வரணையும், ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகையையும் அவசியம் வழிபட வேண்டும்.
பிறகு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டு திரும்ப வேண்டும். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமய குரவர்களால் பாடல்பெற்ற அரிய தலம் திருவெண்காடு. சிறு வயதிலேயே உலக சுகங்களை துச்சமெனத் தள்ளிவிட்டு துறவியான பட்டினத்தடிகளுக்கு முக்திக்கு வழிகாட்டிய திவ்ய திருத்தலம் இது.
அது மட்டுமின்றி புதனின் தோஷத்தையும், பலவீனத்தையும் உடனுக்குடன் போக்கும் சக்தி கொண்ட தலமும் ஆகும். ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்தில் புதன் பலம் பெற்றிருந்தால், மிகச் சிறந்த கல்வியையும், மற்ற கலைகளில் நிபுணத்துவத்தையும் குறைவில்லாமல் தருவார். புதனுக்கு, மிதுனம் சொந்த ராசி ஆகும்.
கன்னி சொந்த ராசி மட்டுமின்றி, உச்ச ராசியும் ஆகும். புதன், ஜெனன காலத்தில் பலம் இழந்து இருந்தாலும், தோஷத்தை உண்டாக்கும். இதர கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். புதன் மிகவும் சாத்வீகமான கிரகமாகும். எனவே பெரும்பான்மையான புதன் தோஷங்கள் பரிகாரங்களுக்கு உட்பட்டவையே.
படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் புதன் காயத்திரி சொல்லி தினசரி வருவதும், வருடம் ஒருமுறை இத்திருத்தலம் வந்து வழிபடுவதும் அவர்களது கல்வியறிவு பெருகும். படிப்பும், பட்டங்களும் எளிதில் அடையலாம்.
மதுரை :
மதுரை மீனாட்சி அம்மன் தலம் புதன் பகவான் வழிபட்ட திருத்தலமாகும். முதலில் தீர்த்தமாகிய பொற்றாமரைக்குளத்தில் நீராடிவிட்டு, மீனாட்சி அம்மனை வழிபட்டு, அடுத்து சொக்கநாதரையும், கால் மாறி ஆடிய நடராஜரையும், முக்குறுனி விநாயகரையும், சித்தரையும் வழிபட்டு புதன் அருள் பெறலாம்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு :
காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் உள்ள பாதையில் சென்றால், இந்தத் திருக்காலிமேடு, திருக்காலீஸ்வரர் கோவிலை அடையலாம். புதன் பகவான் வழிபட்ட திருத்தலம் இது. இக்கோவிலில் புதன் பகவானின் மூலத் திருமேனி காண்படுகிறது. இறைவன் பெயர்-சத்திய நாதேஸ்வரர். அம்பாள்- உற்சவ அம்பாளாக பிரமராம்பிகை உள்ளார். எனவே புதன் தோஷம் உடையவர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய ஒரு தலம் ஆகும்.
வெற்றிக்கு உதவும் 4 தலங்கள் :
ராசியில் அல்லது லக்னத்தில் புதன் அளவிற்கு மீறிய சுபபலம் பெற்றிருந்தாலும், உலக வாழ்க்கையின் சுகத்திற்கும், வெற்றிக்கும், அது தடங்கலாக இருக்கும். அளவிற்கு அதிகமான பொறுமை, சாந்தம், பணிவு, பிறருக்கு விட்டுக்கொடுப்பது, நியாயமாகத் தனக்கு கிடைக்க வேண்டியதற்கு கூடப்போராடாமல் இருப்பது ஆகியவற்றால் பல நஷ்டங்கள் ஏற்படும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் புதன் அம்சத்துடன் திகழும் அல்லது பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். அத்தகைய தலங்கள் 4 உள்ளன.
1. ஸ்ரீரங்கம் கோவிலினுள் உள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் சன்னதி.
2. திருவஹிந்திரபுரம்- ஸ்ரீஹயக்ரீவர்
3. செட்டிப்புண்ணி யம்-ஸ்ரீயோக ஹயக்ரீவர்.
4. காசி- கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன்பிறகு புதன் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கத்தை வழிபடவும். இது கடுமையான புதன் தோஷத்திற்கு மட்டும் உரிய சிறந்த பரிகாரமாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வசதிகள் கிடைக்க துன்பங்கள் நீங்க, செல்ல வேண்டிய கோவில்கள் பரிகாரம்
» கேரளத்துக் கோவில்கள்
» அனைத்து விதமான தோஷங்களை போக்கி பரிகாரம் செய்யும் கோவில்கள்
» கேரளத்துக் கோவில்கள்
» அனைத்து விதமான தோஷங்களை போக்கி பரிகாரம் செய்யும் கோவில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum