Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சொந்த மண்ணுக்கு வரக்கிடைத்தமை மகிழ்ச்சி! இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய தமிழ் அகதிகள் கண்ணீர் மல்க தெரிவிப்பு!

Go down

சொந்த மண்ணுக்கு வரக்கிடைத்தமை மகிழ்ச்சி! இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய தமிழ் அகதிகள் கண்ணீர் மல்க தெரிவிப்பு! Empty சொந்த மண்ணுக்கு வரக்கிடைத்தமை மகிழ்ச்சி! இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய தமிழ் அகதிகள் கண்ணீர் மல்க தெரிவிப்பு!

Post by oviya Thu May 14, 2015 1:53 pm

யுத்தக் காலத்தில் இந்தியாவிற்குச் சென்ற நாங்கள் 25 வருடங்களுக்குப் பிறகு எமது சொந்த மண்ணை வந்தடைந்து விட்டோம். இறுதித் தருணத்திலாவது சொந்த மண்ணுக்கு வந்தமையை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். தாய்நாட்டில் வாழாமல் வேறு எங்கே போய் வாழ்வது என இந்தியாவிலிருந்து நேற்று நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.
எமக்கு இந்தியாவில் சம்பளம் தந்தாங்க: அரிசி ,சீனி என தேவையான எல்லாமே தந்தாங்க: அதனை விட்டு எமது உறவை காணவே சொந்த மண்ணுக்கு வந்தோம். ஆசை வந்ததால் சிலோன் வந்தோம். புதிய அரசாங்கத்தை நம்பியே வந்துள்ளோம். எமது பிரச்சினைகளை தீர்ப்பீர்கள் என நம்புகிறோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யுத்தம் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து 25 வருடங்களுக்கு பிறகு நேற்று நாடு திரும்பிய 65 அகதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வரவேற்றார். இதன்போது நாடு திரும்பிய உறவுகள் கேசரிக்கு தமது கருத்துக்களை கூறும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களில் வயது வந்தவர்கள் ,சிறுவர்கள் , இளைஞர் யுவதிகள் என பலர் காணப்பட்டனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தை செர்ந்த 77 வயதான இராஜம்மா குறிப்பிடுகையில், விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கு இடையில் நடந்த போர் காரணமாக எமது சொந்த மண்ணையும் உறவையுகளையும் விட்டு நீண்ட தூரம் சென்று வாழ்ந்தோம்.

தற்போது மீளவும் எமது மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளோம். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். யுத்தத்தின் காரணமாக 1997 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றேன். அங்கே கூடல் நகரில் உள்ள அகதி முகாமில் 20 வருடமாக வாழ்க்கையை கொண்டு சென்றோம்.

இந்தியாவில் எமது உறவுகளுக்கு எந்த கஷ்டமும் இருக்க வில்லை . சட்டிப்பாணை கழுவியே அங்கு நான் வாழ்ந்தேன். நான் செய்த வேலைக்கு சம்பளம் தந்தார்கள். அரிசி ,சீனி என அன்றாட தேவைகளையும் புர்த்தி செய்து தந்தார்கள்.

எனினும் எமது உறவுகளையும் மண்ணையும் விட்டு தனியாக வாழமுடியாது. ஆசை வந்ததினால் மறுபடியும் சிலோனுக்கு வந்தோம். எப்படியோ எனது வாழ்நாளின் இறுதி தருணத்திலாவது சொந்த மண்ணை அடைந்தமை எனக்கு பெருமையாக உள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலை என்ற கிராமத்திலுள்ள எனது தம்பியின் வீட்டிற்கே செல்லவுள்ளேன். தற்போது சிலோனில் சுதந்திரமாக வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என்று கூறுகின்றனர். உண்மையிலேயே அவ்வாறான நிலைமை காணப்படுகிறது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

அதேபோன்று நாடு திரும்பியவர்களில் இந்தியாவில் இடைநடுவே பாடசாலை கல்வியை நிறுத்திவிட்டு வந்துள்ள 13 வயதான ஸ்டிபன் ராஜ் குறிப்பிடுகையில்,

நான் சென்னையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்றேன். எமக்கு இந்தியாவில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இருப்பினும் எமது சொந்த மண்ணான சிலோனுக்கு வந்தமை எனக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது. நான் 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருக்கிறேன். எனினும் எனது கல்வியை விட்டுவிட்டு வந்துள்ளேன். இலங்கையில் எனது கல்வியை தொடரலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

அதேபோன்று 9 வயதான கிஷோர் என்று சிறுவன் கருத்து தெரிவிக்கையில், நான் 6 வகுப்பில் கல்வி கற்கிறேன் தற்போது யாழ்ப்பாணத்தில் கல்வி பயிலவுள்ளேன் என்றார்.

இதேவேளை மீள்குடியேற்றம் ,புனர்நிர்மாணம் மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் நாடுதிரும்பிய உறவுகளை நேரில் கண்டு சந்தித்த போது, நாடு திரும்பி மக்கள் கண்ணீர் சிந்திய வண்ணம் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன்போது ஒரு பெண்ணொருவர் அமைச்சரிடம் தனது கோரிக்கையை முன்வைத்த போது,

எமது சொந்தங்கள் தற்போது எவரும் இல்லை. நான் தனி பெண்ணாகவே வாழக்கையை நடத்தவேண்டியுள்ளது. எனக்கு தங்குவதற்கு வீடு வாசல்களும் இல்லை. எனது தேவையை அரசாங்கம் புர்த்தி செய்து தரவேண்டும் என கண்ணீர் மல்க அழுதார்.

இதன்போது உயர்கல்வி கற்கும் 23 வயதான நிருஜா என்ற பெண் குறிப்பிடுகையில்,

யுத்ததின் போது மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு படகிலேயே சென்றோம். என்னுடன் 13 பேர் வந்தனர். இந்தியாவில் அகதிகளாக 600 குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தோம். என்னுடைய பெற்றோர்கள் எலலோரும் இந்தியாவிலேயே உள்ளனர். நான் உயர்கல்வி கற்பதற்காக சொந்த நாட்டிற்கு வந்தேன் என்றார்.

அத்தோடு 35 வயதில் இந்தியாவிற்கு சென்ற மன்னாரை பிறப்பிடமாக கொண்ட சின்னையா கூறும் போது,

நான் இந்தியாவில் பெய்ன்ட் வேலைகளே செய்து வந்தேன் .இன்றைய தினம் எனது சொந்த மண்ணிக்கு வந்தமை பெருமையாக உள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சொந்த மண்ணில் இருந்தால் எமக்கு போதுமானது. எப்படியானலும் சொந்த மண் போன்று வராது என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum