Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராகு பகவானுக்கு உகந்த பரிகாரங்கள்

Go down

ராகு பகவானுக்கு உகந்த பரிகாரங்கள்                Empty ராகு பகவானுக்கு உகந்த பரிகாரங்கள்

Post by oviya Sat Dec 20, 2014 1:53 pm

மக்களை வாழ்வில் உயர்த்துவதற்கும், தாழ்த்துவதற்கும் ஆற்றல் பெற்றவர் ராகு. பாவச் செயல்களைப் புரிந்து தவறான வழிகளில் செல்வம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைப் பெற்ற பாவிகளை அந்த செல்வம், பதவி ஆகியவற்றினாலேயே அழித்து விடும் திறனும், துணிவும் இவருக்கு உண்டு.

எவரது ஜாதகத்தில் ராகு சுபமான இடம் அல்லது ராசியைப் பாதித்திருக்கின்றாரோ, எவரது ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளதோ அவர்கள் கீழ்கண்ட மூன்று திருத்தலங்களையோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிற்கோ சென்று அபிஷேகம் செய்து பூஜித்து விட்டு வருவது மிகச்சிறந்த பலனைத்தரும்.

அந்த தலங்கள் வருமாறு:-

திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம். இங்கு ராகுவிற்கு தனி சந்நிதி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்: ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் வைணவ மகாபுருஷராகிய ஸ்ரீராமானுஜராக அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜருடைய விக்கிரகத் திருமேனி ஜீவ விக்கிரமாகும். பின்புறம் தரிசிக்கும் போது படம் விரிந்து நிற்கும் நல்ல பாம்பினைப்போல் காட்சி அளிப்பது சேவிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்.

திருக்காளத்தி: லிங்க வடிவமாகத் தரிசனம் தரும் இறைவனுடன் சேர்ந்து ஒரு சேர ஐக்கியமாகி ராகு, கேது இருவரும் தரிசனம் தருகிறார்கள்.

இம்மூன்று திருத்தலங்களும் இக்கலியுகத்தில் அளவற்ற சக்தி பெற்ற தெய்வீகப் பரிகாரத் திருத்தலங்களாகும். வீட்டில் பூஜை அறையில் தினமும் கூடுதலாக ஒரு தீபம் ஏற்றி, ராகு துதியை 108 தடவைகள் கூறி ராகு படத்தை வணங்கி வரவும். தங்க மோதிரத்தில் கோமேதகம் கல் பதித்து அணியலாம்.

ஜாதகத்தில் முக்கியமாக புத்திர தோஷம், சயன தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்பதோஷம் இருப்பவர்கள் ராகு ப்ரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

எவ்வித வசதியும் இல்லாதவர்கள் அருகிலுள்ள கோவில் ஒன்றில், கர்ப்பக்கிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும் தூங்கா விளக்கில் முடிந்தபோதெல்லாம் சிறிது நெய் சேர்த்து வரவும். ராகு தசை அல்லது ராகு புத்தி காலங்களில் மட்டும் இந்த பரிகாரம் செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum