Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம்: இளம்பெண்ணின் கை துண்டான பரிதாபம்

Go down

ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம்: இளம்பெண்ணின் கை துண்டான பரிதாபம் Empty ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம்: இளம்பெண்ணின் கை துண்டான பரிதாபம்

Post by oviya Sat May 09, 2015 12:47 pm

சென்னை–திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலின் ஓரம் அமர்ந்து பயணம் செய்த பட்டதாரி பெண்ணின் கை துண்டாகியுள்ளது.
சென்னை–திருவனந்தபுரம் ரயிலில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி (20) என்ற இளம் பட்டதாரி பெண் நேற்று இரவு பயணித்துள்ளார்.

திருநெல்வேலி சென்று அங்கிருந்து வாகைக்குளம் செல்ல திட்டமிட்ட அவர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு அல்லாத பெட்டியில் ஏறியுள்ளார்.

கோடைகாலம் என்பதால் காற்றுக்காக ஜன்னல் ஓரம் இருக்கையில் அமர்ந்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 5.15 மணிக்கு விருதுநகர் வரவேண்டிய ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.15 மணிக்கு விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது.

ஜன்னல் ஓரம் மகாலட்சுமி கையை வைத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளம் ஓரம் இருந்த இரும்பு கம்பி ஒன்று ஜன்னலுக்கு வெளியே நீண்டிருந்த மகாலட்சுமி கையை துண்டாக்கியுள்ளது.

இதையடுத்து வலியில் மகாலட்சுமி அலறி துடித்துள்ளார். முதலில் ரயிலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

பின்னர் கை துண்டானதை அறிந்த அவர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருதுநகர் ரயில்வே பொலிசார் மகாலட்சுமியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் விரைந்து செயல்பட்ட பொலிசார் விருதுநகர்–கள்ளிக்குடி இடையே சத்திரரெட்டிய பட்டி பகுதியில் கடந்த மகாலட்சுமியின் கையையும் மீட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum