Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்வி அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கினால் பதவியை துறக்கும் இராதாகிருஸ்ணன்?

Go down

கல்வி அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கினால் பதவியை துறக்கும் இராதாகிருஸ்ணன்? Empty கல்வி அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கினால் பதவியை துறக்கும் இராதாகிருஸ்ணன்?

Post by oviya Thu May 07, 2015 12:34 pm

கல்வி அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கினால் தனது பதவியை துறக்கப்போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பெருந்தோட்ட பகுதிகளில் வழங்கப்படவிருந்த உதவி ஆசிரியர் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு கல்வி அமைச்சின் செயலாளரின் அமந்த போக்கே காரணம்,

இது குறித்து அவருக்கு பல முறை அறிவித்த போதும் அவர் அக்கறையின்மையோடு செயற்பட்டுவருகின்றார்.

இந்த நிலையில் உதவி ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில் இன்று மூன்று மணிக்கு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில், பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை கல்வி அமைச்சின் செயலாளர் இதேபோன்று பல்வேறு விடயங்களில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுக்காமல் தன்னிச்சையாக செயற்படுவதனால் ,அது புதிய அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இன்று பத்தரமுல்லை ,செத்சிறிபாயவில் கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய 3000 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வையும் கல்வி இராஜாங்க அமைச்சர் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்காக கடிதம் அனுப்பபட்டுள்ள ஆயிரத்து 688 பேருக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனம் நாளை வழங்கப்படவுள்ளது.

எஞ்சிய ஆயிரத்து 333 பேருக்கான நியமனம், நேர்முகத் தேர்வின் போது அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர்களுக்கு மீண்டும் ஒரு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum