Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லலித் வீரதுங்கவிற்கு மீண்டும் அழைப்பாணை

Go down

லலித் வீரதுங்கவிற்கு மீண்டும் அழைப்பாணை Empty லலித் வீரதுங்கவிற்கு மீண்டும் அழைப்பாணை

Post by oviya Thu May 07, 2015 12:08 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள லஞ்சமாக மக்களுக்கு தியானம் செய்வதற்காக சில் ஆடைகளை இலவசமாக வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு சில் ஆடைகள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்காக நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் அறவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பினால் லலித் வீரதுங்க, அனுஸ பெல்பிட்ட உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நேற்று இது குறித்த வழக்கு விசாரணைகளின் போது லலித் வீரதுங்க உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சட்டத்தரணிகளோ அல்லது அவர்களோ முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனால், மீளவும் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர். கணக்காய்வாளர் நாயகம், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum