Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் பீஜேபி அரசு பாதுகாக்கவேண்டும்!- இல. கணேசனிடம் மனோ கணேசன்

Go down

இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் பீஜேபி அரசு பாதுகாக்கவேண்டும்!- இல. கணேசனிடம் மனோ கணேசன் Empty இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் பீஜேபி அரசு பாதுகாக்கவேண்டும்!- இல. கணேசனிடம் மனோ கணேசன்

Post by oviya Tue May 05, 2015 2:38 pm

இலங்கையில் வாழும் வாழும் 32 லட்சம் தமிழர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும். இலங்கைத்தீவில், தமிழர்களுடன் 18லட்சம் முஸ்லிம்களும், 150லட்சம் சிங்களவர்களும், பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றார்கள்.
இலங்கையில் வடக்குக்கும், தெற்குக்கும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், வட-கிழக்கு, இந்திய வம்சாவளி, மலையக தமிழர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் நமது கட்சி எப்போதும் உறவு பாலமாக செயலாற்றுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் இல. கணேசனிடம் தெரிவித்தார்.

இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பில் பாரதீய ஜனதா கட்சி சார்பாக இல. கணேசன் மற்றும் தமிழக துணைத்தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜமமு சார்பில் கட்சி தலைவர் மனோ கணேசன், உப செயலாளர் சண். குகவரதன், பிரசார செயலர் குருசாமி, ஊடக செயலர் பாஸ்கரா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இல. கணேசனுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது, .

கடந்த மன்மோகன் சிங் அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கை இந்திய தேசிய நலனுக்கும், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்கும், இலங்கை-இந்திய நீண்டகால நட்புறவு கோட்பாடுகளுக்கும் அப்பால் சென்று சில தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருகின்றது.

எனவே இன்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவிலும் புதிய அரசு ஆட்சியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

அதேவேளை இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியில், இலங்கை தொடர்பான நீங்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதும் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இது சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு அல்ல.

இது நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அரசு என்ற செய்தியும், இரண்டு ஆட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடும் இன்று இலங்கையில் அனைத்து தரப்பினராலும் புரிந்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்றைய இலங்கை அரசு கடந்த கால மகிந்த அரசுடன் பிரதான இரண்டு அடிப்படைகளில் வேறுபடுகிறது. ஒன்று, கடந்தகால தமிழர் எதிர்ப்பு அரச பயங்கரவாத நிலைப்பாடு இன்று இல்லை. இரண்டாவது, அரசு மட்ட இந்திய எதிர்ப்பு இன்று இல்லை.

ஆகவே நாட்டில் மைத்திரி-ரணில் ஆட்சி தமிழர்களின் மத்தியில் கடந்த காலங்களை ஒப்பிடும் போது ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாம் அவசரகதியில் மாற்றங்களை திணித்து மீண்டும் மகிந்த தலையெடுக்க இடம்கொடுக்க விரும்பவில்லை.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் சொல்லொணா போர்க்கால துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாரத அரசு துணையிருக்க வேண்டும்.

அதேபோல் இலங்கையில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இருக்கின்ற ஐந்து பிரதான மாகாணங்களில் இந்நாட்டு தமிழர் ஜனத்தொகையில் சரிபாதியினர் வாழ்கின்றார்கள். குறிப்பாக மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக கல்வி, சுகாதார, வீடமைப்பு ஆகிய துறைகளில் பிற்படுத்தபட்ட பிரிவினராக தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அதேபோல் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களும், வடக்கு-கிழக்கில் இருந்து குடிபெயர்ந்தவர்களும், கடந்த காலங்களில் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து நேரடியாக குடிபெயர்ந்தவர்களுமான தமிழர்கள் வந்து குடியேறி கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் நிலைகொண்டு வாழ்கிறார்கள்.

இத்தகைய அனைத்து தமிழர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் பாரத ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum