Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏய்....நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்த எஸ்.ஐ

Go down

ஏய்....நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்த எஸ்.ஐ Empty ஏய்....நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்த எஸ்.ஐ

Post by oviya Thu Apr 30, 2015 1:42 pm

சேலம் மாவட்டத்தில் மனைவி அழகாக இல்லை என்ற காரணத்திற்காக அவரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக மத்திய தொழில் பாதுகாப்பு எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த சரக்குபிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் சுரேஷ்குமார் (34). என்பவருக்கு லலிதா( 26) என்ற பெண்ணுடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப்படை பிரிவில் சுரேஷ்குமார், எஸ்.ஐயாக வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு, ஒன்றரை வயதில் கமலேஷ்குமார் என்ற மகன் உள்ளார்.

திருமணத்துக்கு பின் தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏழு மாத கர்ப்பிணியான லலிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன்பின் குடும்பம் நடத்த, மனைவி லலிதாவை, அழைத்து செல்ல சுரேஷ்குமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தார் ஒத்துவரவில்லை. மனைவியை ஏற்றுகொள்ள முடியாது என, சுரேஷ்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட லலிதா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருமணத்துக்கு பிறகு நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டதோடு, குழந்தை தனக்கு பிறக்குவில்லையென கூறி கொடுமைப்படுத்தினார்.

மேலும், நீ அழகாக இல்லையென கூறி, தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதற்கு, அவரது பெற்றோர், உடந்தையாக உள்ளனர் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பெண்கள் மீதான வன்கொடுமை உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய தொழில் பாதுகாப்பு எஸ்.ஐ சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum