Top posting users this month
No user |
ஊக்கை விழுங்கிய பச்சிளம் குழந்தை: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்
Page 1 of 1
ஊக்கை விழுங்கிய பச்சிளம் குழந்தை: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் 10 மாத குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
அரக்கோணம் கடம்பத்தூர் அருகே உள்ள மடத்துக்குப்பத்தை சேர்ந்த பாண்டியன், கோகிலா தம்பதியருக்கு ஸ்ரீதிவ்யா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதியன்று குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தபோது, தாயின் தாலியில் தொங்கிய சுமார் 3 செ.மீ. நீளமுள்ள ஊக்கை விழுங்கியுள்ளாள்.
தொண்டையில் ஊக்கு சிக்கியதால் வலியில் துடித்த குழந்தையை பெற்றோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை எக்ஸ்-ரே மூலம் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஊக்கு உணவுக்குழாயில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளாள்.
அங்கு மருத்துவர்கள் ‘என்டோஸ்கோபி’ மூலம் ஊக்கை அகற்ற செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதையடுத்து 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வயிற்றில் 3 மி.மீ. அளவுக்கு சிறிய துவாரம் போட்டு ‘சைட்டோஸ்கோப்’ கருவி மூலம் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை அகற்றியுள்ளனர்.
சுமார் 30 நிமிடம் வரை நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை அடுத்து, தற்போது குழந்தை நலமாக உள்ளது.
மேலும், குழந்தையின் தாயார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் கடம்பத்தூர் அருகே உள்ள மடத்துக்குப்பத்தை சேர்ந்த பாண்டியன், கோகிலா தம்பதியருக்கு ஸ்ரீதிவ்யா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதியன்று குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தபோது, தாயின் தாலியில் தொங்கிய சுமார் 3 செ.மீ. நீளமுள்ள ஊக்கை விழுங்கியுள்ளாள்.
தொண்டையில் ஊக்கு சிக்கியதால் வலியில் துடித்த குழந்தையை பெற்றோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை எக்ஸ்-ரே மூலம் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஊக்கு உணவுக்குழாயில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளாள்.
அங்கு மருத்துவர்கள் ‘என்டோஸ்கோபி’ மூலம் ஊக்கை அகற்ற செய்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதையடுத்து 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வயிற்றில் 3 மி.மீ. அளவுக்கு சிறிய துவாரம் போட்டு ‘சைட்டோஸ்கோப்’ கருவி மூலம் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை அகற்றியுள்ளனர்.
சுமார் 30 நிமிடம் வரை நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை அடுத்து, தற்போது குழந்தை நலமாக உள்ளது.
மேலும், குழந்தையின் தாயார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum