Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது

Go down

அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது Empty அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது

Post by oviya Wed Apr 29, 2015 12:25 pm

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது.
அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட இதர நாடுகளை சேர்ந்த 8 பேரை துப்பாக்கியால் சுட்டு இந்தோனேஷிய அரசாங்கம் துஷாக்காம்பாங்கான் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனையை நிறைவேற்றியது.

அதேவேளை தனது நாட்டு பிரஜையான ரொட்ரிகோ குல்ஹரேட் என்பருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிரேசில் அரசாங்கம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

மேரி ஜேன் பிஸ்டா வெல்ஹேசோ என்ற பெண் சார்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இறுதி கோரிக்கையை விடுத்ததை அடுத்து அந்த பெண்ணின் தண்டனையை இந்தோனேசிய அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.

இந்த பெண் குற்றமற்றவர் எனவும் அவரை தாம் கருவியாக பயன்படுத்தியதாக கூறி பிலிப்பைன்ஸ் நபர் ஒருவர் சரணடைந்துள்ளார். இதன் காரணமாகவே அந்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது ஒத்தவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு போதைப் பொருளை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் பாலி 9 வலய தலைவர்கள் என அழைக்கப்படும் குழுவை சேர்ந்த அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum