Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது

Go down

பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது Empty பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது

Post by oviya Sun Apr 26, 2015 1:14 pm

சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை சைல்ட் லைனின் புகார் மூலம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள சங்கீதம்பட்டியை சேர்ந்த பெருமாள் (38) கட்டிடம் கட்டும் கூலி தொழிலாளி.

இவரது மனைவி கடந்த 9 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இவரது மூத்த மகள் தற்போது 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 2வது மகள் 5ம் வகுப்பு படிக்கிறார், மகன் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் பெருமாள், பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த 2 பெண் குழந்தைகளும் தனது தந்தை பற்றி அருகில் வசிக்கும் செவிலியர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த செவிலியர் கொடுத்த அறிவுரை படி, சைல்ட் லைனுக்கு சிறுமிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சைல்ட் லைன் பணியாளர் நிர்வாகிகள் சங்கீதம்பட்டி சென்று 2 பெண் குழந்தைகளை தனியே அழைத்து விசாரித்த போது 2 குழந்தைகளும், தந்தையிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் பெருமாள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையில், பெருமாள் தனது மகள்களிடம் தவறாக நடந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சேலம் குழந்தைகள் நல குழும தலைவர் சேவியர் கூறுகையில், 2 பெண் குழந்தைகளிடம் பெற்ற தந்தையே தவறாக நடந்துள்ளார்.

இது பற்றி எங்களுக்கு புகார்கள் வந்ததால், இதன்பேரில் 2 நாட்களாக நாங்கள் விசாரித்தோம்.

இதில் பெருமாள் குழந்தைகளிடம் தவறாக நடப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சைல்ட் லைனில் தங்க வைத்துள்ளோம்.

மேலும், 2 குழந்தைகள் பற்றி அரசுக்கு தெரிவித்து அவர்களை படிக்க வைக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum