Top posting users this month
No user |
கடும்தோஷம் நீக்கும் பிரத்யங்கிரா தேவி
Page 1 of 1
கடும்தோஷம் நீக்கும் பிரத்யங்கிரா தேவி
பலவித தோஷங்கள், வெளியில் சொல்லமுடியாத பிரச்சினைகள், மன உளைச்சல், திருமணம், குழந்தையின்மை, திருஷ்டி உள்ளவர்கள் இன்னும் பலவிதமான பிரச்சினைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த இடம் உள்ளது. அது காரைக்காலில் உள்ளது.
பண்டரிநாதன் என்ற பேராசிரியர் வீட்டுக்குள்ளேயே தோட்டத்தில் சிறியதாக எழுப்பியுள்ள பிரத்யங்கிரா, மற்றும் வராஹி ஆலயம் மிக பிரசித்திபெற்றது. ஒவ்வொரு பெளர்ணமியன்றும் இவர் நடத்தும் யாகம் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. ஆலயத்தில் அம்மனே தத்ரூபமாக எழுந்தருளுவது சிறப்பு. பல்வேறு ஊர்களில் இருந்தும் பெளர்ணமியன்று இவர் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் கோவிலில்
குவிகின்றனர்.
சிறிய இடமாக இருப்பதால் கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்கும். முதலில் வராஹி பின்பு பிரத்யங்கிராவுக்கு
யாகம் நடத்தப்படுகிறது. டன் டன்னாக மிளகாய்களை கொட்டினாலும் சிறிது கூட நெடி இருக்காது. இவர் யாகத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த யாகத்தில் போடுவதற்க்கு நாம் வெற்றிலை வாங்கி கொடுக்க வேண்டும்.
எல்லோருடைய வெற்றிலையையும்
சேர்த்து வைத்து நமக்கு ஒரு வெற்றிலை கொடுப்பார்கள். அதில் நம் கோரிக்கைகளை பேனாவால் சிறிதாக எழுதவேண்டும்.
எழுதிய வெற்றிலையை திரும்பவும் யாகத்தில் இடுவார்கள். இதன் மூலம் நம் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றொரு சிறப்பு இந்த யாகத்தீயில் பலவித அம்மனின் உருவங்கள் காட்சி கொடுப்பது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பெளர்ணமியன்று இக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அங்கு சென்று வந்தால் வாழ்வில் மாற்றங்கள் உறுதி.
பண்டரிநாதன் என்ற பேராசிரியர் வீட்டுக்குள்ளேயே தோட்டத்தில் சிறியதாக எழுப்பியுள்ள பிரத்யங்கிரா, மற்றும் வராஹி ஆலயம் மிக பிரசித்திபெற்றது. ஒவ்வொரு பெளர்ணமியன்றும் இவர் நடத்தும் யாகம் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. ஆலயத்தில் அம்மனே தத்ரூபமாக எழுந்தருளுவது சிறப்பு. பல்வேறு ஊர்களில் இருந்தும் பெளர்ணமியன்று இவர் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் கோவிலில்
குவிகின்றனர்.
சிறிய இடமாக இருப்பதால் கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்கும். முதலில் வராஹி பின்பு பிரத்யங்கிராவுக்கு
யாகம் நடத்தப்படுகிறது. டன் டன்னாக மிளகாய்களை கொட்டினாலும் சிறிது கூட நெடி இருக்காது. இவர் யாகத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த யாகத்தில் போடுவதற்க்கு நாம் வெற்றிலை வாங்கி கொடுக்க வேண்டும்.
எல்லோருடைய வெற்றிலையையும்
சேர்த்து வைத்து நமக்கு ஒரு வெற்றிலை கொடுப்பார்கள். அதில் நம் கோரிக்கைகளை பேனாவால் சிறிதாக எழுதவேண்டும்.
எழுதிய வெற்றிலையை திரும்பவும் யாகத்தில் இடுவார்கள். இதன் மூலம் நம் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றொரு சிறப்பு இந்த யாகத்தீயில் பலவித அம்மனின் உருவங்கள் காட்சி கொடுப்பது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பெளர்ணமியன்று இக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அங்கு சென்று வந்தால் வாழ்வில் மாற்றங்கள் உறுதி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum