Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்

Go down

”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர் Empty ”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்

Post by oviya Sun Apr 19, 2015 3:37 pm

இந்தியாவில் ஆசிட் வீச்சால் முகம் கொடூரமாகி, பார்வையிழந்த பெண்ணை வாலிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி.

கடந்த 2003ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று வாலிபர்கள் சோனாலியின் முகத்தை ஆசிட்டை வீசி தப்பியோடி விட்டனர்.

இவர்களது காதலை சோனாலி ஏற்க மறுத்த காரணத்தால், இக்கொடூர சம்பவம் நடந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆசிட் வீச்சால் முகத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து, பார்வை பறிபோன நிலையில் சோனாலி டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவரது தந்தை சாதாரண தொழிலாளியாக இருந்த போது, 15 லட்சம் ரூபாய் வரை செலவழித்தார்.

28 அறுவை சிகிச்சைகள் செய்தாலும், பழைய முகத்தை இழந்து கண்பார்வை இழந்து சதைக்கோளமாகவே காட்சியளித்தார்.

இதற்கிடையில், கடந்த 2012-ம் ஆண்டு பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்திய ’கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்று சூப்பராக பதிலளித்த சோனாலி 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வென்றார்.

இதனையடுத்து பிரபலமடைந்த சோனாலியை, ஊடகவியலாளர் சிதரஞ்சன் திவாரி(வயது 29) காதலிக்க தொடங்கினார்.

அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் மொழியும், தைரியமும் அளித்துவந்த சிதரஞ்சன் திவாரி, கடந்த ஆண்டு தனது காதலை வெளிப்படுத்திய போது வாயடைத்து போனார்.

இதற்கு சோனாலி உடனே சம்மதம் தெவிக்காத போதும், சிதரஞ்சனின் உண்மையான காதலை புரிந்து கொண்டு பச்சை கொடி காட்டியுள்ளார்.

இதனையடுத்து இரு குடும்பத்தாரின் முன்னிலையில் கடந்த புதன்கிழமை இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது, உணர்ச்சிவசப்பட்ட சோனாலி, ’எனது தந்தைக்கு பிறகு வேறொரு ஆண்மகனை நம்ப முடியும் என நான் நினைத்துகூட பார்த்ததில்லை.

என் மீது ஆசிட் வீசப்பட்ட நாளில் இருந்து அவர் என்னை அத்தனை அன்போடும், அரவணைப்போடும் பார்த்துக் கொண்டார். இப்போது என் தந்தைக்கு ஓய்வு அளிக்க என்னை நான் சிதரஞ்சனிடம் ஒப்படைத்துள்ளேன்.

விரைவில் நாங்கள் தேன்நிலவுக்காக மும்பை செல்கிறோம். அதற்குப் பின்னர் எங்கே வாழ்வது? என்பது பற்றி என் கணவருடன் ஆலோசித்து முடிவு செய்வேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum