Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Go down

பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் Empty பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Post by oviya Sun Apr 19, 2015 3:32 pm

பிரபல நடிகையும், மதுரா தொகுதியின் எம்.பி.யுமான ஹேமமாலினியின் சென்னை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் அங்கிருந்த மரச்சாமான்கள், துணிமணிகள் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் மூன்று மாடிகளை கொண்ட குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான வீடு உள்ளது.

சென்னைப் பயணங்களின் போது ஹேமமாலினி அந்த வீட்டில் தங்குவது வழக்கம். மற்ற சமயங்களில் அந்த வீடு பூட்டியே கிடக்கும்.

இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் 20 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், மூச்சு சுவாசக் கவசம் அணிந்தபடி, வீட்டில் சூழ்ந்திருந்த புகையை தீயணைப்புப் படை வீரர்கள் அகற்றினர்.

அப்போது படுக்கை அறையின் ஏ.சி. மெஷின் மற்றும் மின் வயர்கள் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஏ.சி. மிஷினில் இருந்து பரவிய தீ அறையில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் மீது பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், " அறை முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் தீயை அணைப்பது சவாலாக இருந்தது என்றும், ஏ.சி. மிஷினில் ஏற்பட்ட மின்சார கசிவுதான் தீ விபத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, ஹேமமாலினி சென்னை வீட்டில் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த தீ விபத்து தொடர்பாக ஹேமமாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum