Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்வரும் பொதுத் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்

Go down

எதிர்வரும் பொதுத் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் Empty எதிர்வரும் பொதுத் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்

Post by oviya Sun Apr 19, 2015 3:20 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகள் அவருக்கு தாளாத தலையிடிகளைக் கொடுத்து வருகிறது.
அதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ மீண்டும் அரசியலில் பிரவேசிக்க இருக்கும் செய்தி ஜனாதிபதி மைத்திரிக்கு அதீத உபாதையைக் கொடுக்கிறது எனலாம்.

இதைவிட பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்ற நடவடிக்கைகளும் மகிந்த தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், மைத்திரி செய்யக்கூடிய ஒரே வேலை பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவதாகும்.

பாராளுமன்றத்தைக் கலைப்பது மைத்திரிக்கு ஆறுதலைக் கொடுத்தாலும் பொதுத்தேர்தல் நடந்து அதில் மகிந்த தரப்பு வெற்றியை சம்பாதித்துக் கொண்டால் நிலைமை மேன்மேலும் மோசமடையும்.

ஆக, பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துவதோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணி வெற்றி சூடவேண்டிய தேவையும் உள்ளது.

இது நடக்காதவிடத்து, ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம் இடைஞ்சல்கள் நிறைந்ததாகவே இருக்கும். இந்நிலைமை தென்பகுதியைப் பொறுத்ததாக இருக்க, பொதுத் தேர்தல் நடக்கும் போது வடக்கு மாகாணத்தில் புதிய அரசியல் கட்சிகளும் களம் இறங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும். இங்குதான் ஆசனப்பகிர்வில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை கூட்டமைப்பின் வெற்றி என்பது தமிழரசுக் கட்சிக்கானது.

வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவதற்கு தமிழரசுக் கட்சியின் முக்கிய தூண்கள் சம்மதிக்க மாட்டா.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய கட்சிகள் முரண்பட்டுக் கொள்ளத் தலைப்படும்.

எனினும் தமிழ் மக்களின் வாக்குப்பலம் தமக்கே என்ற கர்வத்தில் தமிழரசுக் கட்சி தொடுகிலும் விட்டுக்கொடுக்காத நிலையில் புதிய அரசியல் கட்சிகள் வடக்கு மாகாணத்தில் எழுகை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.

இங்கு புதிய கட்சிகள் என்பது ஏற்கெனவே இருந்த கட்சிகளின் கூட்டமைப்பாகக் கூட இருக்க முடியும்.

இங்கு வடக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்பதில் தென்பகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் பிரசன்னமும் கனகாத்திரமாக இருக்கும் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எதுவாயினும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடுமையான பிரசாரங்கள் வாக்குப் பலத்தை அடித்து சிதறிவிடக் கூடியதாக அமையும் எனலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum