Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மேட்டுப்பாளைம் ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில்

Go down

மேட்டுப்பாளைம் ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில் Empty மேட்டுப்பாளைம் ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:12 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள ஆலாங்கொம்பு வீராசாமி நகரில் ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேவாங்க வம்சம் சோமகல்ய மகிரிஷி கோத்திரம் சின்ன கொட்டலாறு குலம் அறுபது அண்ணன் தம்பி மார்களின் குலத்தாருக்கு சொந்தமான கோவிலாகும்.

இந்த குலத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீரபத்திர சாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலின் பூர்வீக கோவில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரையூரில் உள்ளது. பூர்வீகக் கோவிலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டு வந்தனர். மேலும் கோவை பேரூரில் பட்டீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள லிங்காய்த வீரபத்திரசாமி கோவிலை வாடகைக்கு எடுத்தும் கடந்த 47 ஆண்டாக வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பூர்வீகக்கோவில் மற்றும் பேரூருக்கு குடும்பத்தினருடன் செல்வதில் ஏற்படும் சிரமம் மற்றும் செலவினை கருத்தில் கொண்டு ஆலாங்கொம்பு வீராசாமி நகரில் அழகிய வேலைப்பாடுடன் கோவில் கட்டப்பட்டு கடந்த 1.6.2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

சிறப்பு பூஜைகள்:

குறிப்பாக மாதந்தோறும் அமாவாசையன்று சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. மேலும் ஆருத்ரா தரிசனம், மாசி மாத மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவராத்திரி அன்று ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்த நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் சக்தி அழைத்து வரப்படும் நிகழ்ச்சியும், வீரபத்திர சாமிக்கு 4 கால பூஜையும் நடைபெற்று வருகிறது.

2 நாட்கள் நடைபெறும் சிவராத்திரி திருவிழாவில் 2 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறை தீர்த்து வாழ்க்கையில் அனைத்து நலன்களையும், வளங்களையும் வீர பத்திரசாமி வழங்குகிறார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.

கோவில் நடை திறக்கும் நேரம் :

வீரபத்திரசாமி கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். தினசரி 3 கால பூஜை நடைபெறுகிறது. கோவில் ஸ்ரீ வீரபத்திர சாமி சேரிட்டபிள் டிரஸ்ட்டால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum