Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவுடன் தொடர்பு பேணும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி: விசாரணைகள் தாமதப்பட காரணம் இதுவா?

Go down

மகிந்தவுடன் தொடர்பு பேணும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி: விசாரணைகள் தாமதப்பட காரணம் இதுவா? Empty மகிந்தவுடன் தொடர்பு பேணும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி: விசாரணைகள் தாமதப்பட காரணம் இதுவா?

Post by oviya Sat Apr 18, 2015 2:27 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பொலிஸ் திணைக்களத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவர் தொடர்புகளைப் பேணி வருவதாக பொலிஸ் திணைக்களத் தகவல்களில் இருந்து தெரியவருகின்றது.
பொலிஸ் திணைக்களத்தில் மிக நேர்மையாகவும், எந்தவொரு கட்டுப்பாடுகள் அழுத்தங்களுக்கும் அடிபணியாத ஒருவரே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியுடன் உறவைப் பேணிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் அடிக்கடி மிக நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி வருவருவதாகவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தினமன்று ஆட்சியை தக்கவைக்க இராணுவ சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்ற போது குறித்த அதிகாரி கடுமையான நிலைப்பாட்டில் நடந்து கொண்டதாகவும் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்ற வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதற்கு மகிந்தவுடனான இந்த தொடர்பு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், மகிந்த தரப்பினர் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சூளுரைத்திருந்தனர்.

எனினும் மைத்திரி அரசு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்ய விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளது.

இதேவேளை இந்த பொலிஸ் பிரிவின் விசாரணைகளை தாமதப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சில சக்திகள் சூழ்ச்சி செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum