Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனவளம் பெருக்கும் மாதவன்

Go down

மனவளம் பெருக்கும் மாதவன்        Empty மனவளம் பெருக்கும் மாதவன்

Post by oviya Sat Apr 18, 2015 10:25 am

திருச்சி

திருச்சி நகரின் மத்தியப் பகுதியான கன்டோன்மென்ட் அருகேயுள்ள பீமநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோயில். வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இங்கு முதலில் காளிகா பரமேஸ்வரியை மட்டும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர். ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்டபோது படைவீரர்கள் தங்கும் பகுதியாக இருந்த இடம்தான் இந்த கன்டோன்மென்ட் பகுதி. அவர்களது முழுமையான ஆளுகையின் கீழ் இருந்த இந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களது விருப்ப தெய்வமாக இந்த காளிகா பரமேஸ்வரியை வழிபட்டு வந்துள்ளனர்.

பின்னர் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இது வேணுகோபால கிருஷணன் கோவிலாக உருமாறியது. முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால், அழகிய நுழைவாயில் உள்ளது. இதைக் கடந்ததும் நீண்ட மண்டபம். அதையடுத்து மகாமண்டபம் உள்ளது. எதிரே அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் ஜெய விஜயர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் வேணுகான கிருஷ்ணன் பேரழகோடு அருள்பாலிக்கிறார்.மகா மண்டபத்தின் வலதுபுறம் காளிகா பரமேஸ்வரியின் சந்நதி உள்ளது.

அன்னை கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க அன்னையின் சந்நதியின் முன் சூலம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. பிராகாரத்தின் தென் திசையில் நெடிதுயர்ந்த துளசி மாடம் உள்ளது. மேற்கு பிராகாரத்தில் சொர்ண கணபதி, நாகராஜா போன்றோர்கள் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றனர். சுந்தரேஸ்வரர், மீனாட்சி இருவர் முன்பும் நந்தியும் பலிபீடமும் இருக்க தனித் தனிச் சந்நதிகளில் அருள்பாலிக் கின்றனர். அடுத்து, சண்டிகேஸ்வரர் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அருகேயே ஐயப்பன் மண்டபம் உள்ளது.

அடுத்து முருகன்,வள்ளி - தெய்வானையுடன் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தேவக்கோட்டத்தின் வடபுறம் காலபைரவர் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலதுபுறம் விஷ்ணு துர்க்கை தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறார். துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணனின் மூர்த்தம் பெருஞ்சக்தி வாய்ந்தது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் குணமாக இங்குள்ள கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு, ரோகிணி நட்சத்திரத்தில் இறைவனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சாறுகளை அபிஷேகம் செய்தால் அந்த குழந்தைகள் குணமடைகின்றனர் என்பது கண்கூடான உண்மை. தங்களது கோரிக்கை நிறைவேறத் தொடங்கியதும் கிருஷ்ணனுக்கு பால் பாயசத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு உரியடித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தொலைவில் பீமநகரில் இக்கோயில் அமைந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum