Top posting users this month
No user |
தாயாரால் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானிய சிறுமி இலங்கையில் உள்ள தந்தையுடன் இணைப்பு!
Page 1 of 1
தாயாரால் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானிய சிறுமி இலங்கையில் உள்ள தந்தையுடன் இணைப்பு!
தமது தாயாரால் ஜப்பானுக்கு கடத்திச்செல்லப்பட்ட 5 வயது சிறுமி இலங்கையில் வசிக்கும் தனது தந்தையாருடன் இணைக்கப்பட்டுள்ளார் என ஜப்பானிய டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
1980ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை ஜப்பான் முதல் தடவையாக நிறைவேற்றியுள்ளது.
சட்டத்துக்கு முறனான வகையில் தாய் அல்லது தந்தையுடன் எல்லைத்தாண்டி அழைத்துச்செல்லப்பட்ட சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோன்று இந்த மாத ஆரம்பத்தில் ஜப்பானில் இருந்து குழந்தை ஒன்று ஸ்பெய்னுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பிரான்ஸுக்கும் குழந்தை ஒன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற சம்பவத்தை பொறுத்தவரை ஜப்பானிய பிரஜைகளான தம்பதியினர் 2013ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் வசித்து வந்துள்ளனர்.
எனினும் தந்தையின் அனுமதியில்லாமல் தாய் தமது மகளை ஜப்பானுக்கு அழைத்துச் சென்றதுடன் இலங்கைக்கு வருவதற்கும் மறுத்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் தங்கியிருந்த குழந்தையின் ஜப்பானிய தந்தை மகளை பெற்றுத்தருமாறு ஜப்பானிய ஒசாகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனடிப்படையிலேயே நீதிமன்ற உத்தரவின் படி குறித்த சிறுமி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை ஜப்பான் முதல் தடவையாக நிறைவேற்றியுள்ளது.
சட்டத்துக்கு முறனான வகையில் தாய் அல்லது தந்தையுடன் எல்லைத்தாண்டி அழைத்துச்செல்லப்பட்ட சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோன்று இந்த மாத ஆரம்பத்தில் ஜப்பானில் இருந்து குழந்தை ஒன்று ஸ்பெய்னுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பிரான்ஸுக்கும் குழந்தை ஒன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற சம்பவத்தை பொறுத்தவரை ஜப்பானிய பிரஜைகளான தம்பதியினர் 2013ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் வசித்து வந்துள்ளனர்.
எனினும் தந்தையின் அனுமதியில்லாமல் தாய் தமது மகளை ஜப்பானுக்கு அழைத்துச் சென்றதுடன் இலங்கைக்கு வருவதற்கும் மறுத்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் தங்கியிருந்த குழந்தையின் ஜப்பானிய தந்தை மகளை பெற்றுத்தருமாறு ஜப்பானிய ஒசாகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனடிப்படையிலேயே நீதிமன்ற உத்தரவின் படி குறித்த சிறுமி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum