Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்ட‌ இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்: மனநல மருத்துவமனையில் அனுமதி

Go down

தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்ட‌ இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்: மனநல மருத்துவமனையில் அனுமதி Empty தென்னாப்பிரிக்காவில் தாக்கப்பட்ட‌ இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்: மனநல மருத்துவமனையில் அனுமதி

Post by oviya Sun Apr 12, 2015 3:44 pm

தென்ஆப்பிரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸைனுப் ப்ரியா தாலா வசித்து வருகிறார்.

இவர் அங்குள்ள டர்பன் நகரில் கடந்த மாதம் 20ம் திகதி, பள்ளி இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசுகையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் எழுத்து நடை தனக்கு பிடிக்குமென்று கூறி மதம் குறித்த அவரது கருத்துக்களைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த அங்கிருந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் அவரை அந்த கூட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ள‌னர்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த மறு நாள், ப்ரியா வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம‌ நபர்கள் ஜன்னல் வழியாக செங்கற்களை வீசியும், வீட்டினுள் அத்துமீறி நுழைந்தும் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தகாத முறையில் பேசியதோடு அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ள‌னர்.

இந்த தாக்குதலில் தாலாவின் முகம், கழுத்துப் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

இந்நிலையில் அவர் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தாலா கூறுகையில், நான் செயின்ட் ஜோசப் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

நான் காயத்திற்கு பின்பான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் நான் இங்கு எதையும் உதைத்து கத்திக்கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum