Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!

Go down

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்! Empty பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!

Post by oviya Sat Apr 11, 2015 3:14 pm

கடவுள் விரும்பினால் அன்றி அற்பப் புல் கூட அணுவளவும் அசைய முடியாது. எல்லாம் அவரின் திருவுள்ளப்படியே உலகில் நடக்கிறது.
* போதும் என்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறு இல்லை.
* துன்பம் என்பது தொடர் கதை அல்ல. அது பாலத்தைக் கடந்து செல்லும் நீரைப் போல, நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
* நம்மிடம் தனிப்பட்ட முறையில் எந்த சக்தியும் கிடையாது. ஆனால், கடவுளின் அருள் இருந்தால், அரிய பெரிய செயல்களைக் கூட எளிதாக சாதிக்க முடியும்.
* கடவுளின் திருவடியில் முழுவதுமாக உன்னை நீ அடைக்கலமாக கொடுத்து விட்டால், நம்மை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
* துன்பம் நேரும் சமயத்தில் கடவுளிடம் சென்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். ""இறைவா! எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!'' என்று வாய் விட்டுச் சொல்லுங்கள்.
* தேவையானது உண்மையான அன்பு ஒன்றே. அன்பின்றி கடவுளை யாராலும் அறிய முடியாது. சாதிக்க முடியாததையும் பக்தி மூலம் சாதிக்க முடியும்.
* எப்போதும் கடமையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால், ஆழ்மனதில் கடவுளின் திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டே இருப்பது என்னும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தால், நமது பயணம் இனிமையாகத் தொடரும்.
* ஏரியில் நீந்தும் வாத்து, ஒரு உதறு உதறியதும் உடலில் நீர் சிதறிப் போவது போல, உலக வாழ்வில் இருந்தாலும், அதை உதறித் தள்ள தயாராக இருங்கள்.
* நல்ல மனம் படைத்தவர்கள் உலகில் காணும் அனைத்தையும் நன்மை தரும் கண்ணோட்டத்துடனேயே அணுகுவார்கள்.
* கடமையின் சுமை எவ்வளவு அழுத்தினாலும், கடவுளை வழிபடத் தவறாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தை கடவுளுக்காக ஒதுக்குங்கள்.
*மணிக்கணக்காக வழிபாடு செய்வதை விட, முழு ஈடுபாட்டுடன் இரண்டு நிமிடம் செய்யும் பிரார்த்தனையே போதுமானதும் மேலானதும் ஆகும்.
* பணம் யாரையும் கவர்ந்திழுத்து விடும் ஆற்றல் படைத்தது. ஆனால், பணத்தால் மனித மனம் கறையுடையதாக மாறி விடும்.
* எதைச் சாப்பிடுவதாக இருந்தா<லும், கடவுளுக்கு படைத்து விட்டுச் சாப்பிடுங்கள். இதனால், மனம் சுத்தமாகும்.
* பெற்ற தாய்க்குச் சேவை செய்ய வேண்டியது அனைவருடைய மேலான கடமை. அன்னையின் அன்புக்கு ஈடு இணை கிடையாது.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். சுய கவுரவம் இல்லாத பெண்ணைப் பெண் என்றே குறிப்பிட முடியாது.
*ஆன்மிகத்தில் சாதனை நிகழ்த்த விரும்பினாலும், பணம் சம்பாதிக்க விரும்பினாலும் அதற்கு இளமைக்காலமே தகுதி வாய்ந்தது.
* பிறர் மீது குற்றம் சுமத்துவது நல்லதல்ல. பிறர்குற்றங்களைக் காணத் தொடங்கினால், பின்னாளில் அதுவே நம் இயல்பாகி விடும்.
* தவறுவது மனித இயல்பு தான் என்றாலும், அது மீண்டும் வராமல் தடுத்து சரிப்படுத்த வேண்டியது ஒருவனுடைய கடமை.
* அசைக்க முடியாத மன உறுதி, கடவுளிடத்தில் நம்பிக்கை இந்த இரண்டும் அடிப்படை பண்புகள். இவை இருந்து விட்டால் எல்லாமே இருந்த மாதிரி தான்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum